மனதின் வெளிப்பாடு


Monday 16 December 2019

மத நல்லிணக்கம்



மத நல்லிணக்கம்
மேடையில் மட்டுமல்ல
மேன்மை பெற்றவர்களின்
மனங்களில் நுழைவதால்
மகிழ்ச்சி பெறுகிறது.

Friday 13 December 2019

பக்கங்கள் எங்கே?


வாழ்க்கைப் புத்தகத்தின்
இருபக்க அட்டைகளாய்
நானும் அவளும்
இணைபிரியாமல்
ஒட்டிக் கொண்டிருக்கிறோம்..

ஆசையாய் எழுதி
அன்பாய் பிரசுரித்த
எங்கள் புத்தகத்தின்
பக்கங்கள் இன்றி...

எப்போதாவது மட்டும்
தெரிகின்றன
எங்கள் கண்களுக்கு
நாங்கள் எழுதிய பக்கங்கள்..

கண்களின் தடுமாற்றமா?
இல்லை வாழ்வியல் மாற்றம்.

அட்டையோடு ஒட்ட
ஆசைப் பட்டன பக்கங்கள்
அன்று...
பக்கங்களோடு ஒட்ட
ஆசைப்படுகின்றன அட்டைகள்
இன்று...

பக்கங்கள் இல்லாத அட்டைகள்
உபயோகமற்றதாய்
ஆகிவிடுகின்றது
எடைக்கு கூட
எடுப்பதில்லை எவரும்...

ஒரு பக்கம் எழுதினாலும்
பக்கம் பக்கமாய் எழுதினாலும்
கழன்று விடுகின்றன
பக்கங்கள்..

சாந்தமாய் எழுதினாலும்
சாட்டை கொண்டு எழுதினாலும்
அட்டையோடு ஒட்ட
சங்கடப் படவே செய்கின்றன
பக்கங்கள்..

அன்றாட தேடலில்
அவரவர் குடும்பமே சுமையாக..
யாரும் தூக்கிச் சுமக்க
நினைப்பதில்லை அட்டைகளை..

பால் ஊட்டினேன்
சீராட்டினேன்
மார்பில் புதைத்தேன்
பேசிப் பயனில்லை

பக்கங்கள் வாதிடுகின்றன
எல்லாம் கடமை என்று...

உன்னிடம் இருப்பதென்ன?
உன்னால் ஆவதென்ன?
பணியின்போது கேட்டார்கள்
பணி செய்ய..
பிணியின்போது அவர்கள்
பார்வை பறைசாற்றுகிறது
அந்தக் கேள்விகளை...

முதுமைக் காலத்தில்
உடலும் ஒத்துழைப்பதில்லை
உறவும் ஒத்துழைப்பதில்லை
பணம் இல்லாவிட்டால்
வாழ்வே பெரும் தொல்லை..

எங்களைப்போன்ற நட்புகள்
துணையோடு
அவளுக்கு நானும்
எனக்கு அவளும்
புத்தகத்தின் அட்டைகளாய்
கடைசிவரை
வாழ்ந்து விட்டுப் போகிறோம்...

தனித்துவிடப்பட்டு
தவித்து நிற்கும் பலரை விட
நாம் மேல் என்ற சமாதானத்துடன்






Wednesday 11 December 2019

மனம் கவர்ந்த கவிஞன்


ஒத்த கருத்தோடு
ஒட்டி வாழ்வது
சமூகத்தில் எளிது.

மாற்றுக் கருத்தை
உற்ற கருத்தாய்
உருமாற்ற நினைப்பது
அவனியில் என்றும் பெரிது.

உற்ற கருத்தை
துணிந்து ஒலித்தவன் நீ...
மக்கள் நலம் வாழும்
மாற்றுக் கருத்தை
அவனியில் விதைத்தவன் நீ...

மண்ணில் மறைந்து
ஆண்டுகள் பல ஆனாலும்
அப்பா என்றதும்
பலசமயம்
நினைவில் வருகிறது உன் பா
ரதிஅழகின் உச்சம்
பாரதி பாட்டின் உச்சம்..

ஏழை என்றும் அடிமை என்றும்
எவனும் இல்லை பூமியில்
சமதர்மத்தை காட்டினாய்
இழிவு கொண்ட மனிதர்
இந்தியாவில் இல்லை என்று
சாதி மத பேதத்தை வெறுத்தாய்..

உயிர்கள் அனைத்தும் ஒன்று
உலகிற்கு உவமை காட்டினாய்
காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற
உயர்ஜாதி கவிஞன் நீ
பிறப்பால் அல்ல பாட்டால்....

சுடர்மிகும் அறிவுடன்
சிவசக்தியை கூப்பிட்டு
உன் நலம் கேட்கவில்லை
ஊராரின் நலம் வேண்டுமென்றாய்..

வறுமையை உனது ஆக்கினாய்
பாட்டை இனிமையாக்கினாய் விடுதலை எழுச்சியை உருவாக்கினாய்
மக்கள் வீறுகொண்டு எழச்செய்தாய்

நேர்கொண்ட பார்வை உமது
சிந்தனைத் தடுமாற்றங்களோ எமது
உதற மாட்டோம் உன் நினைவை
நெஞ்சில் நிறைந்த கவிஞனே..

பலமான பாலம்

வீரம் வெளஞ்ச மண்ணு
எங்க மண்ணு
உள்ளம் பறிகொடுக்க
ஏத்த மண்ணு
சொன்ன வார்த்தையில் பத்தாது
வாழ்ந்தால் நெஞ்ச விட்டு போகாது

வைகையிலே
கால் வைக்கையிலே
மனம் துள்ளும்
நெஞ்சை அள்ளும்..

அழகர் வந்திடுவார் குதிரையிலே
கூட்டம் எல்லாம் கூடிடுமே மதுரையிலே
சொக்கர் மீனாட்சி கல்யாணம்
பார்த்து ரசித்திருக்கு பலகாலம்
மதுரை வைகை ஏவி பாலம்
நின்று சிறக்கட்டும் ஆயுள்காலம்.


அந்த ஒரு நொடிக்காக



இதயம் நின்ற நொடிகளில
இது உதவும்
இதயம் மீண்டும் துடிக்க...

எது உதவும்?
இதயம் துடிதுடிக்கச்
செய்பவளின்
நினைவில் சிறக்க..

நொடி போதும்
அவள்
மூளையில் மின்சாரம் பாய்ச்ச

அந்த ஒரு நொடி
காத்துக் கிடக்கின்றது
வருடக்கணக்காக...
ஒருதலைக் காதலாய்..

Tuesday 10 December 2019

நீ இன்றி வாழ?


ஓயாத இருமலால்
அவதியுறுகிறேன்
நெடுநாட்களாக....

கற்பூரத்தை
கனலில் காட்டி
மார்பில் தேய்த்தால்
சளி குறையுமாம்
வழி சொன்னார்கள்...

மனதில் பதிந்த
என்னவள்
சூடு தாங்காமல்
தவிப்பாளென்ற
வலி புரியாமல்.....

தூதுவளை சாப்பிட்டால்
மிக நல்லதாம்
சொன்னார்கள்
எனக்கான தூது
அவள்தான் என்று
அறிந்துகொள்ளாமல்....

வெற்றிலைச்சாறு நல்லதாம்
குடிக்கச் சொன்னார்கள்

வெற்றிலை தட்டு ஏந்தி
அவள் இல்லம் சென்று
நிச்சயிக்க மறுத்துவிட்டு...

ஓமம் நல்லதாம்
சொன்னார்கள்
ஹோமம் வளர்த்து
அவள் கரம்பற்றி
என்னிடம் ஒப்படைக்க
மனமின்றி...

மருத்துவரை நாடினார்கள்
மருந்தை
தவறாமல் தந்தார்கள்.

அவளை
மணமுடித்து தர
மனமின்றி...

மருந்தை
உண்டு செரித்தால் தானே
பலனளிக்கும்
மென்று துப்பினால்?

வலி குறைய வழியின்றி
சளி குறைய வாய்ப்பில்லை
எப்படி புரிய வைப்பேன்?

சளி முற்றினால்
காசம் வருமாம்
சொன்னார்கள்...

சுவாசம்
புறம்தள்ளி
மண்ணில் வாசம்
எப்படி சாத்தியம்?
என் சுவாசமே
அவள்தான் என்று
அறியாமல் பேசுகிறார்கள்...

நான் இருமுவது கண்டு
பொருமுகிறார்கள்
அவளை வெறுத்து...

ஓயாது இருமுகிறேன்
ஒவ்வொரு முறை
இருமும் போதும்
அவள் பெயரை உச்சரிக்கிறேன்..

என் உயிரில் கலந்த
அவள் பெயரை
உச்சரிப்பதால்
அடிக்கடி
தொடர்ந்து இருமுகிறேன்
என்னையும் மீறி....

Sunday 8 December 2019

இல்லம் தேடி வருகிறோம்


உன்னிடம் இருப்பதெல்லாம்
உனக்குச் சொந்தமில்லை

இறைவனின் ஆணையை
ஏற்று நடக்கிறோம்
சிறந்த எடுத்துக்காட்டாய்
 தினந்தோறும்...

பல மேடு பள்ளங்களை
அன்றாடம் கடக்கிறோம்..

மேடு பள்ளங்களை
உள்ளடக்கியதுதான் வாழ்க்கையென 
அன்றாடம் உணர்த்துகிறோம்...

கொட்டும் மழையிலும்
சுட்டெரிக்கும் வெயிலிலும்
தொடர்ந்து பயணிக்கிறோம்
உழைப்பின் உயர்வை உணர்கிறோம்...

எங்கள் சிக்னல் எப்போது வரும்?
காத்திருக்கிறோம் நாங்கள்

சிக்னலுக்காக காத்திருந்து
பல சிக்னல்களை கடந்து
பயணிக்கிறது வாழ்க்கை....

எங்களுக்கு அடையாளம் உண்டு
 எங்களின் அடையாளத்தை
 பலர் உபயோகப்படுத்துகிறார்கள்....

உங்களுக்கான தேடல்கள்
 எங்களுடையது ஆகும்போது 
எங்களுக்கு மகிழ்ச்சி....

எங்களிடம் இருப்பதை 
இல்லாதவர்களுக்கு கொடுக்க 
எங்களால் முடியாது...

அவரவர்களுக்கு உரியதை
அவரவர் இடம் 
ஒப்படைத்து மகிழ்கிறோம்....

வாகனமும் அலைபேசியும்
எங்கள் வழித்துணைு மட்டுமல்ல
 வாழ்க்கை துணை..

அலைபேசி பயன்பாட்டில்
 நாங்கள் முக்கிய அங்கம்.

அலைபேசியில் ஆரம்பித்து 
அதனாலேயே தொடர்கிறது
எங்கள் பயணம்.

நிகழ்காலத்தின் நிஜத்தை
 புரிந்து கொண்டு
நாங்கள் பெற்ற
பட்டம் மறந்து பயணிக்கிறோம்
எங்களுக்கான தேவைகளை
பூர்த்தி செய்ய...

எங்களுக்கான தேடல்கள்
உங்களுக்கான தேவைகள்
மட்டுமல்ல..

ஆயிரம் கனவுகளோடு
அன்றாடம் பயணிக்கிறோம்
உங்களுக்கான உணவுகளை 
சுமந்துகொண்டு...
எங்கள் எதிர்காலம் சிறக்குமென்ற  நம்பிக்கையில்..?


























பயணம்



விரைவான
வளர்ச்சியை நோக்கி
 நகரும் பயணம்
 நாள்தோறும் நடக்கிறது
நகரங்களில்.

கடல்


அகம் நிறைந்த அளவில்லா  அதிசயம்
யுகம் நிறைந்த கடல்.

ஆனந்தம் தரும் கடற்கரை  என்றும்
மிகுந்திடும் சிறப்பு காதலர்க்கு.

இயற்கையை கண்டு ரசிக்க யாவரின்
மனம் விரும்புவது கடல்.

ஈக்கள் மொய்க்காது அழகூட்டும் கடல்
உருவாக்க உலபுவர் பொறுப்பு.

உப்புதரும் கடல்நீர் உப்பை  அளவோடு
உபயோகித்தால் மிக நன்று.

ஊறுநேராது உலகு இயற்கை சீற்றம்
கடலில் புகுந்து கலக்கும்வரை.

எது கண்டும் அஞ்சாத கடலும் சிலநேரம்
 உள்வாங்குவது பாரினில் வியப்பு.

ஏனென்று புரியாத புதிர் கடலுள்ளும்
 கடலை அறிபவர் தமக்கு.

ஐந்தில் கற்ற நீச்சல் ஐம்பதிலும் பலன்
கடலினுள் உழைப்பவர் தமக்கு.

ஒன்றைப் பற்றி சிந்தித்து ரசிப்பதற்கு சிறப்பாய் எதிர்நிற்கும் கடல்.

ஓயாத கடல்அலையால் மனம் துள்ளும்
கண்ணால் காண்பவர் தமக்கு.

ஔ என்பது உயிரெழுத்து மீனவருக்கு கடலே என்றும் உயிர் மூச்சு.

Saturday 7 December 2019

கடலும் பெண்ணும்


ஓ.. கடலே
நீ பரந்து விரிந்த பலசாலி
ஆழிப்பேரலையால்- நீ
ஆட்டம் போட்டால்
ஆடிப்போகும் உலகம்

இருந்தாலும்
உன்னுள் புதைந்த வளங்கள் எடுக்க
உன் ஆழம் அறிந்து செயல்பட
எங்களால் முடியும்.

ஆனால்
பெண்ணின் மனதின்
ஆழம் அறிய
முயன்று கொண்டிருக்கிறோம்
 பல நூற்றாண்டுகளாய்...

சென்றவர்களும் வந்தவர்களும் தேடித்தேடி களைப்படைந்து சொல்கிறார்கள்...

கடலைவிட பெண்ணே பலசாலி- அவள்
மனதின் ஆழம் காண முடியாததால்!



நவீன யுகம்



அழுகிறது குழந்தை தொட்டிலில்
அழுகை நிறுத்த
ஓடிவந்தாள் தாய்...

ஆராரோ ஆரிராரோ
தாலாட்டு பாட்டு சத்தம்...

தாய் படவில்லை
அலைபேசியில் ஒலிக்கிறது
குழந்தை சிரிக்கிறது.

நவீன யுகத்தில்
தாய்ப்பால் மட்டுமல்ல
 தாலாட்டும் வற்றிவிட்டது...

Thursday 5 December 2019

அன்பு


அன்பை விதைத்து அன்பை பெருக்கும்
அன்பே உயர் பண்பு.

ஆனந்தம் தரும் உள்ளன்பு அதனன்றி
 அ௧ிலம் சிறக்காது நன்று.

இயல்பானஅன்பு பண்பானால் அது
தருமே உலகில் சமாதானம்.

ஈசனாய் தெரிகிறான் அன்பால் ௭ன்றும்
மனதை தொட்டவர் மனங்களிலே.

உண்மை பேசி ஊருக்கு உழைத்தால்
உலகம் வசப்படும் அன்பாலே.

ஊற்று நீர்  வற்றும் வற்றாதே என்றும்
அள்ளஅள்ளக் குறையா அன்பு.

எண்ணம் யாவும் அன்பு மிகுந்தால்
ஏழைக்கு இரங்குதல் எளிதாகும்.

 ஏமாற்றம் இன்றி உலகம் செழிக்கும்
எதிர்பார்ப்பு அற்ற அன்பாலே.

ஐயம் வேண்டாம் அன்பிற்கு அதைப்
பெற்றவர் பெறுவர் தவிப்பு.

ஒலிக்கும் குரலில் அன்பு நிறைந்தால்
உலகம் மகிழுந்து வரவேற்கும்.

ஓயாது கடலலை ஓய்ந்தால் கடலில்லை
ஓயாத அன்பிற்கு எல்லையில்லை.

ஔவையின் அன்பே ஆத்திசூடி அறம்
 சிறக்க உலவுவோம்அன்புசூடி.

Tuesday 3 December 2019

தியானம் செய்வோம்




மதம் சார்ந்ததல்ல தியானம்
மகத்துவம் வாய்ந்தது தியானம்
அனுதினமும் செய்வோம் தியானம்
அன்பாய் அரவணைக்கும் தியானம்

கண் மூடி அமர்வது தியானம்
 மனதை குவிப்பது தியானம்
  மகிழ்ச்சி நிறைப்பது தியானம்
 ஆற்றல் கொடுப்பதே தியானம்

முகத்தின் பொலிவை கூட்டும்
பேச்சின் தொனியை மாற்றும்
தெளிவான செயலாற்றல் உருவாக்கும்
புருவ மத்தியில் மெய்சிலிர்க்கும்

 வாழ்ந்தார்கள் முன்னோர்கள் இறந்தகாலம்
 வாழ்வார்கள் சந்ததிகள்  எதிர்காலம்
 வாழ்கின்ற வாழ்க்கையே நிகழ்காலம்  வாழ்க்கையில்  கூடட்டும் தியான காலம்.

 முன்னோர்களை நினைத்து சில திதிகள்
சந்ததியை நினைத்தே பல கவலைகள்
நிதியை நிறைத்தால் நிம்மதி கிட்டுமா?
அவர் விதி மாற்ற நம்மால் முடியுமா?

இல்லத்தின் மகிழ்ச்சிக்கு இனியதைச் செய்கிறோம்
 உள்ளத்தின் மகிழ்ச்சிக்கு உரியதை செய்வோமா?
அவரவர் செய்யும் பாவபுண்ணியம்
 மறுமை வாழ்வில்  வருவது நிச்சயம்

 ஆடி ஓடுகையில் விஞ்ஞானம்
 ஆட்டம் ஒடுங்குகையில் மெய்ஞானம்
 இதுவா நமது  உயர் ஞானம்?
 இளமையில் திறக்கணும் மெய்ஞானம்

 புகழிடம் பணியும் மனது
 புகலிடம் தேடி அலையும்
 புக இடமற்ற ஒருநாள்
 படைத்தவன் புகழிடம் பணியும்.

மண் வளத்தால் மகசூல் பெருகும்
மன வளத்தால் மரியாதை பெருகும்
மனவளம் தியானத்தால் பெருகும்
தியானம் பெருக அகிலம் சீர்படும்.

    

Monday 2 December 2019

படைப்பின் நோக்கம்


படைப்பின் நோக்கம் படைத்தவன் அறிவான்
பாழும் நெஞ்சே கலங்காதே
உந்தன் கவலை மாற்றும் சக்தி
அவனிடம் உண்டு மறவாதே

உன்னால் முடியும் உந்தன் பணியை
அனுதினம் செய்ய மறவாதே
தானாய் எப்படி மாறும் என்று
வீணாய் கவலை கொள்ளாதே

உன்னை காட்டிலும் கீழே உள்ளோர்
உலகில் மக்கள் பலர் ஆவார்
அவர் நலம் பற்றி  அ௧்௧றை கொண்டால்
உன் நலம் பற்ற பலர் வருவார்

 பற்றற்று இருக்கப் பழகி விட்டால்
 பற்றும் முதல் கரம் படைத்தவனே
 திக்கற்று திரியும் மனம் தன்னை
 திசை திருப்புவதும் அவன்தானே

படைத்தவன் நினைவு பெருகி விட்டால்
பழம் கஞ்சியும் அமிர்தமாகும்
மனதில் பெருகும் ஆசை எல்லாம்
தானாய் மறைந்து சரியாகும்.

  இல்லறம் துறவு எதுவானாலும்
 இயல்பாய் இருத்தல் அவசியமே
 மதில் மேல் பூனை ஆகாமல்
 மனதில் மகிழ்ச்சி அவசியமே

 பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை
 பிறந்தவர் இறவாமல் இருந்ததில்லை
 உணர்ந்தால் வாழ்வில் ஏது தொல்லை
 உணர்ந்தவர் செயலால் அழிவதில்லை

 மதம் மனிதனுக்கு வழிகாட்டும்
 மனிதம் மனிதனை வாழ்விக்கும்
 மனம் முழுவதும் மனிதம் நிறையட்டும்
 படைப்பின் நோக்கம் செயலில் தொடரட்டும்.!

Sunday 1 December 2019

தரக் குழுவின் மேன்மை



ஒவ்வொரு மனிதருமே சொல்லுவதே தரம் என்றால் பொருளோட உயிர் தானே
ஒவ்வொரு பொருட்களுமே சொல்லுவதே தரம் போனால் தங்காது சந்தையிலே
குழுவாய் இணைதல் வேண்டும் நம் தொழிலில்
குறைகள் எளிதாய் தீரும் வெகுவிரைவில்

தரமே ஓ தரமே நீ கூடி விடு
திறனே உற்பத்தித்திறனே நீ பெருகிவிடு

குழுவாய் கூடி விவாதிப்போம்
குறைகள் பற்றி யோசிப்போம்
நம் தொழிலின் வளர்ச்சி பற்றி நாள் முழுதும் சிந்திப்போம்

எந்தத் தொழிலில் குறையில்லை
எந்த செயலில் தடையில்லை
தடைகள் போக்கும் பணிகள் எல்லாம்
திறனைக் கூட்டும் வழிமுறைகள்

குறை நீக்கும் குழுக்கள் எல்லாம்
நிறுவனத்தில் உயர்வாகும்
குழுவில் அங்கம் நீயும் என்றால்
உன்னை வாழ்த்திப் புகழ்பாடும்

யாருக்கில்லை சிந்தனைகள்?
ஆக்கபூர்வ சிந்தனைகள்
குழு சிந்தனையில் வரும் துளிகள் எல்லாம்
பெரும் உயர்வுக்கு வழிகாட்டும்
நம் குறை உணர்ந்தால்
அதை தினம் முயன்றால்
தீர்வும் வெளியாகும்

தரமே ஓ தரமே நீ கூடிவிடு
திறனே உற்பத்தித்திறனே நீ பெருகிவிடு

கற்ற பாடம் பலவாகும்
பெற்ற தீர்வு சிலவாகும்
முயன்று நாமும் உழைத்தால் தானே
சிந்தையெல்லாம் செயலாகும்

வளரும் நாடு நாமென்ற
தாழ்வு இன்னும் நமக்கு எதற்கு?
முடியும் என்று போராடு
உயர்ந்த தரக்குழுவோடு

வெற்றி என்ற இலக்கு எல்லாம்
அனைவருக்கும் பொதுவாகும்
நாம் பெற்றிடுவோம் என நினைப்பதெல்லாம்
அவரவர் வாழ்வின் இயல்பாகும்

திறமை இருக்கு உன்னோடு
உயர்ந்த தரக்குழுவோடு
நம் கரம் இணைந்தால்
அது தரம் கொணர்ந்தால்
தொடர் வெற்றியும் எளிதாகும்

தரமே ஓ தரமே நீ கூடி விடு
திறனே உற்பத்தித்திறனே நீ பெருகி விடு.

ஏழ்மை



வாழுறது கஷ்டம் தான்
ஏழை வாழுறது கஷ்டம்தான்

சந்தோசமா வாழ்ந்திட தான் அனைவருக்கும் இஷ்டம்தான்
ஏழை செய்யும் தொழிலில் எல்லாம் வந்திடுதே நஷ்டம்தான்

வாழுறது கஷ்டம் தான்
ஏழை வாழுறது கஷ்டம்தான்

பணக்காரன் வச்சதுதான் சட்டங்க
பொருளை பதுக்கி வைச்சு வித்தாக்க குத்தங்க
உழவு செய்யும் விவசாயிக்கு நஷ்டங்க
வாங்கி விற்கும்  தரகருக்கு லாபங்க.

வாழுறது கஷ்டம் தான்
ஏழை வாழுறது கஷ்டம்தான்

ரோட்டோரம் குவித்து விக்கும்  வெங்காயம்
பார்த்துகிட்டே நடந்திருப்போம் தினம்தோறும்
பதுங்கி இருச்சு ஊருக்குள்ள பக்குவமா
விலை கேட்டா தலை சுத்தும் நிச்சயமா

வாழுறது கஷ்டம் தான்
ஏழை வாழுறது கஷ்டம்தான்

கடன் வாங்கி வாங்கிபுட்டா வாகனம்
கடன் கட்டிடத் தான் தினந்தோறும் சாகணும்
ஏழைக்கு கூடாதுங்க ஆசை
ஏக்கப் பெருமூச்சே அவனுக்கான ஓசை

வாழுறது கஷ்டம் தான்
ஏழை வாழுறது கஷ்டம்தான்

பொதுத்துறை தான் தனியாரா மாறுது - அதில் பணிபுரிந்தோர் உள்ளமெல்லாம் வாடுது
 வேலையில ஏதுமில்ல நிரந்தரம்
கலங்குறானே தொழிலாளி தினம் தினம்

பொருளாதார வீழ்ச்சி ன்னு சொல்றாங்க
மாற்றம் வரும் நம்புங்க ன்னு சொல்றாங்க
ஏமாறும் ஏழைய பாருங்க - அவன் அடிப்படைத் தேவையை உணருங்க.

வாழுறது கஷ்டம் தான்
ஏழை வாழுறது கஷ்டம்தான்



  

Saturday 30 November 2019

கீதம்



இனிய கீதமே மிதந்து வா
என்னுள் புகுந்து என்னை நிறைக்கும்
இனிய கீதமே விரைந்து வா

என்னுள் புகுந்த கவலையெல்லாம்
உன்னால் தூரம் போகுமே
மனபாரம் வெகுவாய் குறையுமே
என்னுள் புதைந்த பலவற்றை
உன்னால் மீட்டு எடுக்கின்றேன்
காற்றில் மிதந்து என் காதில் நீ
பட்டால் கவலை மறக்கின்றேன்.

இனிய கீதமே மிதந்து வா
என்னுள் புகுந்து என்னை நிறைக்கும்
இனிய கீதமே விரைந்து வா

உன் ராகம் தாளம் அறியவில்லை
அதை அறிய ஏனோ முயலவில்லை
இருந்தும் என்னை நிறைக்கின்றாய்
மனதில் மகிழ்ச்சி புரிகின்றாய்
காற்றில் கலந்த நீ
கண்ணில் என்றும் படவில்லை
காதில் நுழைந்த நீ
என்றும் என்னை விடவில்லை

இனிய கீதமே மிதந்து வா
என்னுள் புகுந்து என்னை நிறைக்கும்
இனிய கீதமே விரைந்து வா

உலகம் முழுதும் எண்ண அலைகள்
அதை உணரத்தானே ஆன்மீக வழிகள்
நம்மை இணைக்கும் அதிர்வலைகள்
நம்மோடு இருக்கும் உணர்வலைகள்
புண்ணுக்கு தடவும் மருந்தே
புவி யாவும் உனக்கு விருந்தே
அவரவர் தேவை அறிந்து -நீ
ஆற்று சேவை தொடர்ந்து.

இனிய கீதமே மிதந்து வா
என்னுள் புகுந்து என்னை நிறைக்கும்
இனிய கீதமே விரைந்து வா

புவி ஈர்ப்பால் நடக்கின்றேன்
பாதை  பல கடக்கின்றேன்
உன் ஈர்ப்பால் மகிழ்கின்றேன்
உலகில் நான் வாழ்கின்றேன்

இனிய கீதமே மிதந்து வா
என்னுள் புகுந்து என்னை நிறைக்கும்
இனிய கீதமே விரைந்து வா












உலக எய்ட்ஸ் தினம்


(World AIDS Day)
                                             (01-12-2019)

மனிதனை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் எத்தனையோ தீமைகளில் முக்கியமான அங்கம் வகிப்பது எய்ட்ஸ் ஆகும். ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழர் பண்பாடு- கலாச்சாரம். அதனைப் போற்றி காப்போம் .உலகில் எய்ட்சை ஒழிப்போம். 

எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக
ஒருவன் ஒருவன் முதலாளி என்ற பாட்டு மெட்டில் நான் எழுதிய பாடல்.

உலகில் உலகில் எயட்சாலே
அடையும்  துயரம் ஏராளம்
மனிதன் செய்யும் தவறாலே
அதுதான் பரவுது படுவேகம்
எய்ட்சை வெல்ல ஆயுதம்  எதற்கு ?
ஆசை துறந்தால் வருமோ எய்ட்ஸ் .?

(உலகில் உலகில் எயட்சாலே
அடையும்  துயரம் ஏராளம்)

அவளின் மீது அவனுக்காசை
பணத்தின் மீது அவளுக்காசை
ஆசை தான் அழிவைத் தருகிறது
உணர்ந்தும் மனமோ அலைகிறது
அலையும் மனதை அடக்கி வைத்தால்
நீதான் அதற்கு எஜமானன்
அலையும் மனதை அலையவிட்டால்
அதுதான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்து விடு
நலமாய் வாழும் முடிவை எடு.

(உலகில் உலகில் எயட்சாலே
அடையும்  துயரம் ஏராளம்)

குடும்பம் இருக்கு குழந்தைகள் இருக்கு
கண்டவரோடு சரசங்கள் எதற்கு ?
கற்பு என்பது ஒழுக்கமடா
அதில் ஆணும் பெண்ணும் அடக்கமடா
ஆசை எல்லை மீறும்  போது
தவறு நேர்ந்திடும் தன்னாலே
அதனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல்
உன்னிடம் உள்ளது உயர்வாலே
உடலின் உணர்ச்சிகள்  இயல்பாகும்
தவறாய்த்  தீர்ப்பது நோயாகும்

(உலகில் உலகில் எயட்சாலே
அடையும்  துயரம் ஏராளம்)

உன்னை அடைந்து உறவை அடைந்து
கருவில் வளரும் குழந்தையை அடைந்து
பரவும் நோய் தான் எயட்சாகும்
இது குழந்தைக்கும் வருவது தவிப்பாகும்
நாலு சுவர்க்குள் நடக்கும் தவறு
என்று மட்டும் எண்ணாதே
உலகே அறியும் நிலை உருவானால்
அழிவே அதற்கு கிடையாது
ஆசை என்பது அளவோடு
சுகமோ கட்டிய   துணையோடு .

(உலகில் உலகில் எயட்சாலே
அடையும்  துயரம் ஏராளம்) 

Thursday 28 November 2019

உயரும் வழி



எல்லோருக்கும் எப்போதும்
எல்லாமும் தெரிவதில்லை
என்றாலும் வாழ்கிறோம் எல்லோரும்

வாழ்வின் புரிதலை
 புரிந்து கொண்டவர்களை தேடி வாய்ப்புகள் வலம் வருகின்றது

தெரிந்ததைக் கொண்டு
தெரிய வேண்டிய இடத்தில்
மிகச்சரியாய் தெரியப்படுத்தி
சந்தோசமாய் நகர்கிறது
சிலரின் வாழ்க்கை

நிறையத் தெரிந்தும்
புரிதல் இல்லாத அறிதலால் சங்கடத்தோடு நகர்கிறது
பலரின் வாழ்க்கை

அன்றாட வாழ்வில்
அநேக  விஷயங்கள்
அனுதினமும் அரங்கேறுகின்றது

கற்றவர்கள் எல்லாம் பெற்றார்களா?
எல்லாம் பெற்றவர்கள் கற்றவர்களா?
பட்டம் அறிதலின் அங்கீகாரம் மதிப்பெண் அதன் அடையாளம்
அடையாளத்தை மையப்படுத்தி மட்டும் வாய்ப்புகள் நிலைப்பதில்லை

சூழ்நிலையை புரிந்து
கற்றதை வாழ்வோடு பொருத்தும்
சக்தியைப் பெற்றவர்களே சாதிக்கிறார்கள்

உழைப்பில் உண்மையும்
நேர்மையும் அவசியம்
அதைவிட
அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு
ஒவ்வொருநாளும் சிந்திப்பது
மிக மிக அவசியம்.

உன்னை அறி முதலில்
உயரும் வழி எதிரில்
உண்மையான அறிதலால்
புரிதல் மேம்படும்

புரிதல் மேம்பட
பாதை தெரிந்திடும்
பாதை தெரிந்திட
பயணம் தொடர்ந்திடும்
பயணம் தொடர்ந்திட
உலகம் வசப்படும்.








நட்பின் சங்கமம்



முக்கடலும் சங்கமிக்கும்
இந்தியாவின் தென்கோடியாம்
குமரி முனையில்
முன்னாள் மாணவர்களின்
பாசமிகு சந்திப்பால்
பரவசமடைகிறேன்.

ஆர்ப்பரிப்பது கடலலை
நம்மோடு பிணைந்திருப்பது பாசவலை
பாசப்பிணைப்பால் ஏற்பட்டுள்ளது
இப்படியொரு இணைப்பு

அவ்வப்போது சிலரை
அருகில் இருந்தோரை
ஆர்வமுடன் சந்தித்தோம்
தொலைவில் இருந்தவரோடு
தொலைபேசியில் பேசினோம்
பழகினோம் என்றாலும்
அனைவரையும் ஒன்றுதிரட்டுகின்ற நிகழ்வு
ஒரு சேர சந்திக்கும் நிகழ்வு
மிகச்சிறந்த நிகழ்வு
மனம் நிறைய மகிழ்வு

கல்லூரியில் இணைந்தோம், பயின்றோம்
ஆளுக்கு ஒருதிசையில்
ஆரவாரமின்றி பறந்தோம்
எத்தனை ஆண்டுகள் கழிந்தன?
நம்மில் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தன?
கண்டு கழிப்போம், எண்ணி பூரிப்போம்.

கண்களால் பார்த்து
வார்த்தைகளால் பூரித்து
அன்பைக் கொட்டி
அன்பைப் பெற்று
அளவளாவி மகிழ்வது தனிச்சிறப்பு.
அவரவர் வாழ்வில்
மறக்க முடியாத நாட்கள் சிலவாகும்.
மறக்க முடியாத நாட்களில்
இதுவும் ஒன்றாகும்
நினைக்க நினைக்க நிறைவாகும்

நட்பை நேசிக்கும் அனைவராலும்
நட்பு பிரகாசமடைகிறது,
சொந்த பந்தம் கொண்டாடும்
ஊர் திருவிழா போல
நட்பைக் கொண்டாடும் சொந்தங்கள்
நட்புக்காக கடல் தாண்டி பயணித்து
நம்மோடு கலந்திருப்பது தனிச்சிறப்பு
அதுவே நட்பின் பெருஞ்சிறப்பு.

அன்று நம்மோடு இருந்த சிலர்
இன்று இல்லாதிருக்கலாம்
இன்னும் சிலர் நோயுற்று இருக்கலாம்.
அத்தகைய நட்புக்காக மனம் வருந்துவோம்
பிறப்பும் இறப்பும் அவன் கையில்
வாழ்கின்ற வாழ்வே நம் கையில்
உயரிய நட்பின் உன்னதத்தை
பறை சாற்றுவோம்
மீண்டும் மீண்டும்  சந்தித்து
மகிழ்ச்சி காண்போம்.

எத்தனை முறை சந்தித்தோம்
என்பதை விட
மீண்டும் எப்போது சந்திப்போம்?
என்று இதயம் துடிப்பது
உண்மையான நட்பு.

பணி ஒய்வு வாழ்த்து



பணி நிறைவை வாழ்த்துகிறேன்
மன நிறைவாய் போற்றுகிறேன்

இனிய நண்பர் ஆறுமுகம்
நட்பால் சிறந்தவர்
அன்பால் உயர்ந்தவர்
அ, ஆ என்பது உயிர் எழுத்தின் தொடக்கம்
அலாவுதீன், ஆறுமுகம் உயர் நட்பின் பொருத்தம்
இயல்பாய் அமைந்தது
இனிதாய் தொடர்வது.

நட்பு எல்லைக்கு அப்பால்
 நட்ப்புக்கள் பலர் இருந்தாலும்
நடப்பில் தொடர்பவர்கள் சிலர்
உயர் நட்பாய் உறுதுணை இருந்தவர்
உன்னதமானவர்
வசீகரிக்கும் பேச்சால்
நம் அனைவரின் மனம் கவர்ந்தவர்

வாய்ப்புகளை பயன்படுத்துவதில் வல்லவர்
வாய்ப்புக்களை தவற விடக் கூடாதுஎன
அனைவருக்கும் போதிக்கும் நல்லவர்
பேச்சு, பட்டிமன்றம்,  நாடகம்கதை, கவிதை, வானொலி உரை என
பன் முகங்களுக்கு சொந்தக்காரர்
இதை உணர்ந்து தானோ என்னவோ
பெற்றோர் இவருக்கு ஆறுமுகம் எனப் பெயரிட்டுஅன்பாய் அழைத்தனரோ?

முகநூலில் இவரின் பதிவுகள்பலரின் மனங்களிலே பதிந்திருக்கின்றன.
அன்றாட வாழ்வினிலேஅவசியம் எனப்படும்ஆன்மிகம் உள்ளிட்டஅனைத்து விஷயங்களையும்
நட்பு வட்டத்துக்கு செய்தியாய் பரப்பிநட்பை சிறப்பித்தவர்
அனைவரும் நலம் வாழ முயற்சித்தவர்.

திருநெல்வேலி அல்வாவை தீபாவளிப் பண்டின் மூலம்அனைவருக்கும் பகிர்ந்தளித்துஅல்வா ஆறுமுகம் என அன்போடு அழைக்கப்பட்டவர்.
இருட்டுக்கடை அல்வாவைதரத்துக்கு சான்றாக பன்முறை தன பேச்சில் தெரிவித்தவர்.

இறைவன் நெல்லுக்கு வேலி அமைத்துநெல் காத்த ஊரே
நெல்வேலி ஆகி திருநெல்வேலி ஆனதாக வரலாறு.
திருநெல்வேலி இவரின் சொந்த ஊர்.
நெல்லை மண்ணும், நெல்லையப்பர் ஆலயமும்இவரின் நீங்காத நினைவுகள்.

உழைக்கும் ஆலையையும்வணங்கும் ஆலயத்தையும்சமமாய் நினைப்பவர்
ஆன்மீக தேடலில்அதிகம் நாட்டம் கொண்டவர்.
நான் அறிந்திட பல தகவல் தந்தவர், தருபவர்

எங்கள் மதம் வேறுமனம் ஒன்று
என் நலத்தை அவரும்அவர் நலத்தை நானும்என்றென்றும் நினைக்கிறோம்நேசிக்கிறோம் , மகிழ்கிறோம்
பணி ஒய்வு என்பதுமாறுபட்ட சாதனைக்கான நிகழ்வு

நண்பர் ஆறுமுகம்நீடுழி வாழ வேண்டும்
புதிய சாதனைகள் நிகழ்த்த வேண்டும்.

இலக்கை நோக்கி


இலக்கை நோக்கிய பயணம்
வாழ்வை வசந்தமாக்கும் பயணம்

இலக்கு இல்லாத பயணம்
துடுப்பு இல்லாத படகு போன்றது

இலக்கை தீர்மானித்து
உழைப்பை  சீர்படுத்து

இலக்கு என்பது உந்துசக்தி
திறமைகளை வெளிக்காட்டும் வாய்ப்பு

ஜே கே பென்னரின்
நமக்கான பங்களிப்பின்
சென்ற ஆண்டுகளின்
இலக்கை எட்டினோம்
மகிழ்கிறோம்.. பூரிக்கிறோம்.

இந்த ஆண்டின் இலக்கு
............ கோடி
கூட்டு முயற்சியின்
கூடுதல் பலம் மட்டுமல்ல
இன்னும் சக்தி தரும்
புதிய யுக்திகளும் தேவை.

இழப்பை தவிர்த்து
தரத்தை கூட்டி
செலவை குறைத்து
லாபம் பெருக்கி
நிறுவனத்தை வளர்த்து
நாமும் வளர
சிந்திப்பது அனைவரின் கடமை

என் சிந்தனையின் முன்னணியில்
சிறகடித்து பறப்பது அவுட்சோர்சிங்.

அளவான குடும்பம்
வளமான வாழ்வு
குடும்பத்தின் மேன்மைக்கு

அளவான ஊழியர்கள்
அதிகரிக்கும் அவுட்சோர்சிங்
தொழிலின் மேன்மைக்கு

திறனில் மேம்பட்ட
பலரின் துணையுடனே
தொழிலை சிறப்பாக்கும்
முறைதானே அவுட்சோர்சிங்

நிறுவன வளர்ச்சியிலே
அன்றாட முறைதனிலே
பொதுத்துறை, தனியார்துறை
அனைவரும் விரும்புகின்ற
முறைதானே அவுட்சோர்சிங்

பணியை பகிர்ந்தளித்து
உற்பத்தியை எளிதாக்கி
வாடிக்கையாளரை வசப்படுத்தும்
முறைதானே அவுட்சோர்சிங்

நம் பணியை நமக்காக
நாம் விரும்பும் வகைதனிலே
முன்னேற்றப் பின்னணியில்
உருவாக்கி சமர்ப்பிக்கும்
முறைதானே அவுட்சோர்சிங்

சிந்தனையின் நாட்டமெல்லாம்
தரத்தை மேம்படுத்த
புதியன படைக்க என
எண்ணத்தை எளிதாக்கி
செயலை சிறப்பிக்கும்
முறைதானே அவுட்சோர்சிங

பணி செய்யும் இடமெல்லாம்
பொருட்களை குவித்து வைத்து
5 S ஐ பாழ்ப்படுத்தும்
நிலையைப் போக்குகின்ற
முறைதானே அவுட்சோர்சிங்

கண்காணிப்பை பலப்படுத்தி
அவுட்சோர்சிங் உறவுகளை அதிகப்படுத்தி
அவர்தம் திறமைதனை வசப்படுத்தி
உற்பத்தியை சிறப்பாக்கி
இலக்கை எளிதாய் எட்டலாம்
உயர்வாய் உலகை வலம் வரலாம்.

பணி நிறைவு வாழ்த்து


பணி நிறைவு வாழ்த்து

.அன்பால், பண்பால், அறத்தால்  உயர்ந்தவரே
இனிய நண்பரே, இன்னுயிர் தோழரே
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையிலே
ஜே. கே  பென்னர் தொழிற்சங்கம் கண்டெடுத்த முத்தே
தொழிற்சங்கத்தின் முன்னாள் முதல்வரே
எங்களின் வழிகாட்டியே ...

பலருக்கு மரத்தடி மரியாதை
செய்வித்த உமக்கு - இன்று
மரத்தடி மரியாதை செய்வதில்
எங்களுக்கு மரியாதை
மகிழ்கிறோம் .. பூரிக்கிறோம் 

தலைமைப் பதவி தானாய் வருவதில்லை
உழைப்போர்களின் அங்கீகாரம்
செயல்திறனின் பிரதிபலிப்பு
உழைப்பின் வெகுமதி 

முன்னாள் தொழிற்சங்க தலைவர்களோடு
இணைந்து செயல்பட்டு அனுபவம் பெற்றீர்
அளப்பரிய அனுபவத்தை  ஆதாரமாக்கி
ஜே. கே  பென்னர் தொழிற்சங்கத்தை
தலைமையேற்று வழிநடத்தினீர்
தொழிலாளர் நலம்வாழ வழிகாட்டினீர் 

ஊதிய உயர்வு ஒப்பந்தம்
இருமுறை நிகழ்ந்தது உம் தலைமையில்
ஜே. கே  பென்னர் உற்பத்தி பிரிவு
மதுரையில் நீடித்து நிலைப்பதற்கு
இக்கட்டான தருணங்களில்
தொழிற்சங்கத்தின் அரவணைப்பை தந்தீர்
தொழிலாளர்களின் அரணாக நின்றீர் .

மனதில் சரியெனப்பட்டதை
உணர்ந்து செயல்பட்டீர் .
தொழிலாளர் நிர்வாத்திடையே
சிறந்த பாலமாக திகழ்ந்தீர் .
உமது அன்பால் மகிழ்ந்திருக்கிறோம்
உதவும் பண்பால் வியந்திருக்கிறோம்

நட்பை நேசிக்கும் நல்லவரே
தொண்டுள்ளம் கொண்ட பண்பாளரே
தலைக்கணம்  சிறுதும் உமக்கு இல்லை
அதனால் விரிகிறது நட்பு எல்லை
உமது நட்பு வட்டம் பெரிது.

இன்று உமக்கு பணி ஓய்வு
சாய்வு நாற்காலியில் அமர்ந்து
ஓய்வு எடுக்க அல்ல பணி ஓய்வு
மாறுபட்ட சாதனைக்கான
ஒரு நிகழ்வே பணி ஓய்வு
உடல் திறன் உள்ளவரை
உள்ள உறுதியோடு தொண்டாற்றி சிறக்க
மனம் நிறைந்து வாழ்த்துகிறோம் 

அன்னை மீனாட்சியின் அருளோடு
அன்பான குடும்பத்தின் அரவணைப்போடு
அளவில்லா நட்புகள் துணையோடு
வாழ்வு சிறக்க வாழ்த்துகிறோம்

இயற்கை வளம்

இயற்கை வளம் இயற்கை வளம் காக்கணும்
இயன்றவரை செயல்படுத்த உழைக்கணும்
மனுசனோட வாழ்வாதாரம் உயரணும்
இயற்கை மகத்துவத்தை மனம் உணர்ந்து மதிக்கணும்

மனுசனுக்கு தேவை இருக்கு ஆயிரம்
இயற்கை அழிவதற்கு எடுக்கலாமா ஆயுதம்
சமூக மாற்றம் வாழ்வில் மிக அவசியம்
சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பாதகம்.

திறந்தவெளியில் தினம்தோறும் நடக்கணும்
திறந்தவெளியில் மலம் கழிக்க மறுக்கணும்
சுகாதாரம் சுத்தம் பேண உழைக்கணும்
தூய்மையான இந்தியாவை  படைக்கணும்.

உற்பத்தி கலாச்சாரம்



எத்தனையோ கலாச்சாரம் அவனியில் இருக்குது.
 அவரவர்எண்ணம் போல் அத்தனையும் நடக்குது
நடை உடை பாவனைகள் அனைத்திலும் மாறுபாடு.
நிறம்  குணம் சூழல் என அனைத்திலும் வேறுபாடு.

அகிலம் யாவும் விரும்புகின்ற கலாச்சாரம் இருக்குது
ஒருமித்த  குரலில் அது ஓங்கியே ஒலிக்குது
தரமான உற்பத்தி வெற்றியாளர்களின் கலாச்சாரம்
அதனால் நிலைத்து நீடிக்கும் வியாபாரம்

உன்னதமான உற்பத்தியின் உயர்ந்த கலாச்சாரம்
ஊறு நேராது தொழிலை சிறப்பாக்கும் இனிய கலாச்சாரம்.
 பொருளைப் பெற்றவரும் விற்றவரும் மகிழ்கின்ற கலாச்சாரம்.
போட்டிச் சந்தையில் வீறுநடை போடுகின்ற  கலாச்சாரம்
.
உற்பத்தியாளர்கள் கடைப்பிடிக்க ஏதுமில்லை ஆச்சாரம்
உண்மையாய் கடைப்பிடித்தால் தடைபடாது வியாபாரம்
இழப்பை தவிர்த்து உற்பத்தியைப் பெருக்கும் கலாச்சாரம்
விலையும் விநியோகமும் சீராக்கும் உன்னத கலாச்சாரம்

உபயோகிப்பாளர்களை நேசித்து உருவாக்கும் கலாச்சாரம்
எண்ணம்  -சொல் -செயலால் சக்தி பெரும் கலாச்சாரம்
ஏற்றம் தரும் சாதனைகள் எளிதாக்கும் கலாச்சாரம்
தரமான உற்பத்தியே நம் அடிப்படையான கலாச்சாரம்.

இன்னும் தவறு எதற்கு ?

இன்னும் தவறு எதற்கு ?
 முறையா அது நமக்கு?

நடக்க பழகும்
சிறு குழந்தையா நாம்?
 தடுமாறி விழ
தடம் பதித்த
தடகள வீரர்கள் அல்லவா நாம்?
சாதனை படைக்கும் சாதனையாளர்கள் அல்லவா நாம்?

இன்னும் தவறு எதற்கு ?
முறையா அது நமக்கு?

விற்பனைச் சந்தையில்
 தரத்தை முதன்மைப்படுத்தி முன்னேறியவர்கள் அல்லவா நாம்
தொடர் ஓட்டத்தில்
தொடர்ந்து வரும் சவால்களை துணிந்து புறம்தள்ளி
 சுடர்விடும் சூரியனாய்
 பிரகாசிப்பவர்கள் அல்லவா நாம்

இன்னும் தவறு எதற்கு ?
முறையா அது நமக்கு?

முட்டித் தள்ள
முதுகுக்குப் பின்னால்
ஆயிரம் பேர்.
சற்றே சரிந்தாலும்
 ஜன கன மன கீதம் இசைக்க
 காத்துக் கிடப்பவர்கள் பலர்.
அத்தனையும் உணர்ந்து தானே பயணித்துக் கொண்டிருக்கிறோம்

இன்னும் தவறு எதற்கு ?
முறையா அது நமக்கு?

விக்கெட் விழாமல்
விரைந்து ரன் குவிப்பவரையே கிரிக்கெட்  விரும்புகிறது.
தரம் கெடாமல்
திறனை உயர்த்துபவரையே
தொழில் விரும்புகிறது
மார்க்கெட்டும் சிறக்கிறது.
மங்காத தரமே
 மகிழ்ச்சிப் பயணத்தின்
வெளிப்பாடு என்பதை மறந்து விட்டோமா என்ன?

இன்னும் தவறு எதற்கு ?
முறையா அது நமக்கு?

தரம் இன்னும் கூட்டுமுயற்சியில் சிலரின் அஜாக்கிரதையால்
பலரின் உழைப்பு  வீணடிக்கப்படுவது எவ்வகையில் நியாயம்?
என்னால் தவறு ஒருபோதும் நேராது
ஒலிக்க தெரிந்த நமக்கு
உணர்ந்து சிறக்க  என்ன தயக்கம்?

இன்னும் தவறு எதற்கு ?
முறையா அது நமக்கு?

தற்செயலாய் வருவதல்ல தரம் அவரவர் பங்களிப்பை
அடுத்தடுத்த நிலைகளில்
மிகச் சரியாய் செய்வதே
ஒட்டுமொத்த தரமாகி
தவறே இல்லாத உற்பத்தியாகி  வாடிக்கையாளர்களை கவர்கிறது
விற்பனை சிறக்கிறது
உணர்ந்துதானே
உயர்ந்து இருக்கிறோம்

இன்னும் தவறு எதற்கு ?
முறையா அது நமக்கு?

  தொழில் பழகுனர் அல்ல நாம்
 அரை நூற்றாண்டை கடந்தவர்கள் தொழிலில் வல்லுநர்கள்
குறையே இல்லாத உற்பத்தியை குவிக்கும் சூட்சுமம் கற்றyவர்கள்

First time right
Fenner always best

 மனதில் பதியட்டும்
தொழிலில் மிளிரட்டும்

 தவறை சரி செய்வதைவிட
தவறே இல்லாமல் செய்வது சாலச்சிறந்தது
உணர்வோம் இன்னும் உயர்வோம்.

முதல் மரியாதை



தரமே
உன்னை உருவாக்கும் சிற்பி நாங்கள்
உன்னால் உயர்ந்து இருக்கிறோம்
உயர்வை பெற்றிருக்கிறோம்

உன்னை மெருகூட்ட மெருகூட்ட
வாடிக்கையாளர்களின் எல்லை விரிவடைகின்றது
போட்டி சந்தையில்
மரியாதை மண்டியிடுகிறது

உழைப்பின் வியர்வை துளிகளும்
சிந்தனையின் செயலாக்கமும்
உன்னோடு உறவாடுகையில்
நீ உச்சத்தை தொடுகின்றாய்
அச்சத்தை மறந்து பயணிக்கிறோம் நாங்கள்.

தரத்தை உயர்வாய் படைக்கவேண்டும்
அதையும் விரைவாய் படைக்க வேண்டும்
சேதாரம் தவிர்க்க வேண்டும்
முழு உற்பத்தி பராமரிப்பை எட்ட வேண்டும்
முழுதாய் உணர்ந்திருக்கிறோம்
முதன்மை பெற்று இருக்கிறோம்.

புதியன புகுதலும்
பழையன கழிதலும் இயற்கை
எங்களின் அடிச்சுவடு மாறாமல்
புதுமையைப் புகுத்தி இருக்கிறோம்
புதியன கற்றுக்கொள்கிறோம்
விலையும் விநியோகமும் சீராக
அவசியமானதை அறிந்து கொள்கிறோம்
அன்றாடம் கடைபிடிக்கிறோம்.

எங்களின் கூட்டு முயற்சியால்
எங்களின் உற்பத்தி
முன்னேற்றத்தை நோக்கியே பயணிக்கிறது
வடிவமைப்பிலும் பயன்பாட்டிலும்
வாடிக்கையாளர்களை பரவசப்படுத்துகிறது

உன்னை படைக்கும் இல்லம் மட்டுமல்ல
எங்கள் உள்ளமும்
நவீன மயமாக்கப்பட்டுள்ளது

ஓம் என்னும் இரண்டெழுத்து மந்திரம்
சுவாசக் காற்றை உள்ளிழுத்து
நம் சக்தியைப் பெருக்கும்
தரம் என்னும் மூன்றெழுத்து மந்திரம்
உற்பத்தியை சிறப்பாக்கி
வாடிக்கையாளர்களை வசப்படுத்தும்.
தொழிலை சிறப்பாக்கும்

தவறே இல்லாத உற்பத்தி நமதாகட்டும்.
தரத்தால்  நமது மரியாதை தொடர்ந்திடட்டும்.