வீரம் வெளஞ்ச மண்ணு
எங்க மண்ணு
உள்ளம் பறிகொடுக்க
ஏத்த மண்ணு
சொன்ன வார்த்தையில் பத்தாது
வாழ்ந்தால் நெஞ்ச விட்டு போகாது
வைகையிலே
கால் வைக்கையிலே
மனம் துள்ளும்
நெஞ்சை அள்ளும்..
அழகர் வந்திடுவார் குதிரையிலே
கூட்டம் எல்லாம் கூடிடுமே மதுரையிலே
சொக்கர் மீனாட்சி கல்யாணம்
பார்த்து ரசித்திருக்கு பலகாலம்
மதுரை வைகை ஏவி பாலம்
நின்று சிறக்கட்டும் ஆயுள்காலம்.
No comments:
Post a Comment