மனதின் வெளிப்பாடு


Wednesday 11 December 2019

பலமான பாலம்

வீரம் வெளஞ்ச மண்ணு
எங்க மண்ணு
உள்ளம் பறிகொடுக்க
ஏத்த மண்ணு
சொன்ன வார்த்தையில் பத்தாது
வாழ்ந்தால் நெஞ்ச விட்டு போகாது

வைகையிலே
கால் வைக்கையிலே
மனம் துள்ளும்
நெஞ்சை அள்ளும்..

அழகர் வந்திடுவார் குதிரையிலே
கூட்டம் எல்லாம் கூடிடுமே மதுரையிலே
சொக்கர் மீனாட்சி கல்யாணம்
பார்த்து ரசித்திருக்கு பலகாலம்
மதுரை வைகை ஏவி பாலம்
நின்று சிறக்கட்டும் ஆயுள்காலம்.


No comments:

Post a Comment