வாழுறது கஷ்டம் தான்
ஏழை வாழுறது கஷ்டம்தான்
சந்தோசமா வாழ்ந்திட தான் அனைவருக்கும் இஷ்டம்தான்
ஏழை செய்யும் தொழிலில் எல்லாம் வந்திடுதே நஷ்டம்தான்
வாழுறது கஷ்டம் தான்
ஏழை வாழுறது கஷ்டம்தான்
பணக்காரன் வச்சதுதான் சட்டங்க
பொருளை பதுக்கி வைச்சு வித்தாக்க குத்தங்க
உழவு செய்யும் விவசாயிக்கு நஷ்டங்க
வாங்கி விற்கும் தரகருக்கு லாபங்க.
வாழுறது கஷ்டம் தான்
ஏழை வாழுறது கஷ்டம்தான்
ரோட்டோரம் குவித்து விக்கும் வெங்காயம்
பார்த்துகிட்டே நடந்திருப்போம் தினம்தோறும்
பதுங்கி இருச்சு ஊருக்குள்ள பக்குவமா
விலை கேட்டா தலை சுத்தும் நிச்சயமா
வாழுறது கஷ்டம் தான்
ஏழை வாழுறது கஷ்டம்தான்
கடன் வாங்கி வாங்கிபுட்டா வாகனம்
கடன் கட்டிடத் தான் தினந்தோறும் சாகணும்
ஏழைக்கு கூடாதுங்க ஆசை
ஏக்கப் பெருமூச்சே அவனுக்கான ஓசை
வாழுறது கஷ்டம் தான்
ஏழை வாழுறது கஷ்டம்தான்
பொதுத்துறை தான் தனியாரா மாறுது - அதில் பணிபுரிந்தோர் உள்ளமெல்லாம் வாடுது
வேலையில ஏதுமில்ல நிரந்தரம்
கலங்குறானே தொழிலாளி தினம் தினம்
பொருளாதார வீழ்ச்சி ன்னு சொல்றாங்க
மாற்றம் வரும் நம்புங்க ன்னு சொல்றாங்க
ஏமாறும் ஏழைய பாருங்க - அவன் அடிப்படைத் தேவையை உணருங்க.
வாழுறது கஷ்டம் தான்
ஏழை வாழுறது கஷ்டம்தான்
No comments:
Post a Comment