மனதின் வெளிப்பாடு


Thursday 28 November 2019

பணி நிறைவு வாழ்த்து


பணி நிறைவு வாழ்த்து

.அன்பால், பண்பால், அறத்தால்  உயர்ந்தவரே
இனிய நண்பரே, இன்னுயிர் தோழரே
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையிலே
ஜே. கே  பென்னர் தொழிற்சங்கம் கண்டெடுத்த முத்தே
தொழிற்சங்கத்தின் முன்னாள் முதல்வரே
எங்களின் வழிகாட்டியே ...

பலருக்கு மரத்தடி மரியாதை
செய்வித்த உமக்கு - இன்று
மரத்தடி மரியாதை செய்வதில்
எங்களுக்கு மரியாதை
மகிழ்கிறோம் .. பூரிக்கிறோம் 

தலைமைப் பதவி தானாய் வருவதில்லை
உழைப்போர்களின் அங்கீகாரம்
செயல்திறனின் பிரதிபலிப்பு
உழைப்பின் வெகுமதி 

முன்னாள் தொழிற்சங்க தலைவர்களோடு
இணைந்து செயல்பட்டு அனுபவம் பெற்றீர்
அளப்பரிய அனுபவத்தை  ஆதாரமாக்கி
ஜே. கே  பென்னர் தொழிற்சங்கத்தை
தலைமையேற்று வழிநடத்தினீர்
தொழிலாளர் நலம்வாழ வழிகாட்டினீர் 

ஊதிய உயர்வு ஒப்பந்தம்
இருமுறை நிகழ்ந்தது உம் தலைமையில்
ஜே. கே  பென்னர் உற்பத்தி பிரிவு
மதுரையில் நீடித்து நிலைப்பதற்கு
இக்கட்டான தருணங்களில்
தொழிற்சங்கத்தின் அரவணைப்பை தந்தீர்
தொழிலாளர்களின் அரணாக நின்றீர் .

மனதில் சரியெனப்பட்டதை
உணர்ந்து செயல்பட்டீர் .
தொழிலாளர் நிர்வாத்திடையே
சிறந்த பாலமாக திகழ்ந்தீர் .
உமது அன்பால் மகிழ்ந்திருக்கிறோம்
உதவும் பண்பால் வியந்திருக்கிறோம்

நட்பை நேசிக்கும் நல்லவரே
தொண்டுள்ளம் கொண்ட பண்பாளரே
தலைக்கணம்  சிறுதும் உமக்கு இல்லை
அதனால் விரிகிறது நட்பு எல்லை
உமது நட்பு வட்டம் பெரிது.

இன்று உமக்கு பணி ஓய்வு
சாய்வு நாற்காலியில் அமர்ந்து
ஓய்வு எடுக்க அல்ல பணி ஓய்வு
மாறுபட்ட சாதனைக்கான
ஒரு நிகழ்வே பணி ஓய்வு
உடல் திறன் உள்ளவரை
உள்ள உறுதியோடு தொண்டாற்றி சிறக்க
மனம் நிறைந்து வாழ்த்துகிறோம் 

அன்னை மீனாட்சியின் அருளோடு
அன்பான குடும்பத்தின் அரவணைப்போடு
அளவில்லா நட்புகள் துணையோடு
வாழ்வு சிறக்க வாழ்த்துகிறோம்

No comments:

Post a Comment