மனதின் வெளிப்பாடு


Thursday 28 November 2019

பணி ஒய்வு வாழ்த்து



பணி நிறைவை வாழ்த்துகிறேன்
மன நிறைவாய் போற்றுகிறேன்

இனிய நண்பர் ஆறுமுகம்
நட்பால் சிறந்தவர்
அன்பால் உயர்ந்தவர்
அ, ஆ என்பது உயிர் எழுத்தின் தொடக்கம்
அலாவுதீன், ஆறுமுகம் உயர் நட்பின் பொருத்தம்
இயல்பாய் அமைந்தது
இனிதாய் தொடர்வது.

நட்பு எல்லைக்கு அப்பால்
 நட்ப்புக்கள் பலர் இருந்தாலும்
நடப்பில் தொடர்பவர்கள் சிலர்
உயர் நட்பாய் உறுதுணை இருந்தவர்
உன்னதமானவர்
வசீகரிக்கும் பேச்சால்
நம் அனைவரின் மனம் கவர்ந்தவர்

வாய்ப்புகளை பயன்படுத்துவதில் வல்லவர்
வாய்ப்புக்களை தவற விடக் கூடாதுஎன
அனைவருக்கும் போதிக்கும் நல்லவர்
பேச்சு, பட்டிமன்றம்,  நாடகம்கதை, கவிதை, வானொலி உரை என
பன் முகங்களுக்கு சொந்தக்காரர்
இதை உணர்ந்து தானோ என்னவோ
பெற்றோர் இவருக்கு ஆறுமுகம் எனப் பெயரிட்டுஅன்பாய் அழைத்தனரோ?

முகநூலில் இவரின் பதிவுகள்பலரின் மனங்களிலே பதிந்திருக்கின்றன.
அன்றாட வாழ்வினிலேஅவசியம் எனப்படும்ஆன்மிகம் உள்ளிட்டஅனைத்து விஷயங்களையும்
நட்பு வட்டத்துக்கு செய்தியாய் பரப்பிநட்பை சிறப்பித்தவர்
அனைவரும் நலம் வாழ முயற்சித்தவர்.

திருநெல்வேலி அல்வாவை தீபாவளிப் பண்டின் மூலம்அனைவருக்கும் பகிர்ந்தளித்துஅல்வா ஆறுமுகம் என அன்போடு அழைக்கப்பட்டவர்.
இருட்டுக்கடை அல்வாவைதரத்துக்கு சான்றாக பன்முறை தன பேச்சில் தெரிவித்தவர்.

இறைவன் நெல்லுக்கு வேலி அமைத்துநெல் காத்த ஊரே
நெல்வேலி ஆகி திருநெல்வேலி ஆனதாக வரலாறு.
திருநெல்வேலி இவரின் சொந்த ஊர்.
நெல்லை மண்ணும், நெல்லையப்பர் ஆலயமும்இவரின் நீங்காத நினைவுகள்.

உழைக்கும் ஆலையையும்வணங்கும் ஆலயத்தையும்சமமாய் நினைப்பவர்
ஆன்மீக தேடலில்அதிகம் நாட்டம் கொண்டவர்.
நான் அறிந்திட பல தகவல் தந்தவர், தருபவர்

எங்கள் மதம் வேறுமனம் ஒன்று
என் நலத்தை அவரும்அவர் நலத்தை நானும்என்றென்றும் நினைக்கிறோம்நேசிக்கிறோம் , மகிழ்கிறோம்
பணி ஒய்வு என்பதுமாறுபட்ட சாதனைக்கான நிகழ்வு

நண்பர் ஆறுமுகம்நீடுழி வாழ வேண்டும்
புதிய சாதனைகள் நிகழ்த்த வேண்டும்.

No comments:

Post a Comment