ஓ.. கடலே
நீ பரந்து விரிந்த பலசாலி
ஆழிப்பேரலையால்- நீ
ஆட்டம் போட்டால்
ஆடிப்போகும் உலகம்
இருந்தாலும்
உன்னுள் புதைந்த வளங்கள் எடுக்க
உன் ஆழம் அறிந்து செயல்பட
எங்களால் முடியும்.
ஆனால்
பெண்ணின் மனதின்
ஆழம் அறிய
முயன்று கொண்டிருக்கிறோம்
பல நூற்றாண்டுகளாய்...
சென்றவர்களும் வந்தவர்களும் தேடித்தேடி களைப்படைந்து சொல்கிறார்கள்...
கடலைவிட பெண்ணே பலசாலி- அவள்
மனதின் ஆழம் காண முடியாததால்!
No comments:
Post a Comment