மனதின் வெளிப்பாடு


Tuesday 3 December 2019

தியானம் செய்வோம்




மதம் சார்ந்ததல்ல தியானம்
மகத்துவம் வாய்ந்தது தியானம்
அனுதினமும் செய்வோம் தியானம்
அன்பாய் அரவணைக்கும் தியானம்

கண் மூடி அமர்வது தியானம்
 மனதை குவிப்பது தியானம்
  மகிழ்ச்சி நிறைப்பது தியானம்
 ஆற்றல் கொடுப்பதே தியானம்

முகத்தின் பொலிவை கூட்டும்
பேச்சின் தொனியை மாற்றும்
தெளிவான செயலாற்றல் உருவாக்கும்
புருவ மத்தியில் மெய்சிலிர்க்கும்

 வாழ்ந்தார்கள் முன்னோர்கள் இறந்தகாலம்
 வாழ்வார்கள் சந்ததிகள்  எதிர்காலம்
 வாழ்கின்ற வாழ்க்கையே நிகழ்காலம்  வாழ்க்கையில்  கூடட்டும் தியான காலம்.

 முன்னோர்களை நினைத்து சில திதிகள்
சந்ததியை நினைத்தே பல கவலைகள்
நிதியை நிறைத்தால் நிம்மதி கிட்டுமா?
அவர் விதி மாற்ற நம்மால் முடியுமா?

இல்லத்தின் மகிழ்ச்சிக்கு இனியதைச் செய்கிறோம்
 உள்ளத்தின் மகிழ்ச்சிக்கு உரியதை செய்வோமா?
அவரவர் செய்யும் பாவபுண்ணியம்
 மறுமை வாழ்வில்  வருவது நிச்சயம்

 ஆடி ஓடுகையில் விஞ்ஞானம்
 ஆட்டம் ஒடுங்குகையில் மெய்ஞானம்
 இதுவா நமது  உயர் ஞானம்?
 இளமையில் திறக்கணும் மெய்ஞானம்

 புகழிடம் பணியும் மனது
 புகலிடம் தேடி அலையும்
 புக இடமற்ற ஒருநாள்
 படைத்தவன் புகழிடம் பணியும்.

மண் வளத்தால் மகசூல் பெருகும்
மன வளத்தால் மரியாதை பெருகும்
மனவளம் தியானத்தால் பெருகும்
தியானம் பெருக அகிலம் சீர்படும்.

    

No comments:

Post a Comment