மனதின் வெளிப்பாடு


Saturday 30 November 2019

கீதம்



இனிய கீதமே மிதந்து வா
என்னுள் புகுந்து என்னை நிறைக்கும்
இனிய கீதமே விரைந்து வா

என்னுள் புகுந்த கவலையெல்லாம்
உன்னால் தூரம் போகுமே
மனபாரம் வெகுவாய் குறையுமே
என்னுள் புதைந்த பலவற்றை
உன்னால் மீட்டு எடுக்கின்றேன்
காற்றில் மிதந்து என் காதில் நீ
பட்டால் கவலை மறக்கின்றேன்.

இனிய கீதமே மிதந்து வா
என்னுள் புகுந்து என்னை நிறைக்கும்
இனிய கீதமே விரைந்து வா

உன் ராகம் தாளம் அறியவில்லை
அதை அறிய ஏனோ முயலவில்லை
இருந்தும் என்னை நிறைக்கின்றாய்
மனதில் மகிழ்ச்சி புரிகின்றாய்
காற்றில் கலந்த நீ
கண்ணில் என்றும் படவில்லை
காதில் நுழைந்த நீ
என்றும் என்னை விடவில்லை

இனிய கீதமே மிதந்து வா
என்னுள் புகுந்து என்னை நிறைக்கும்
இனிய கீதமே விரைந்து வா

உலகம் முழுதும் எண்ண அலைகள்
அதை உணரத்தானே ஆன்மீக வழிகள்
நம்மை இணைக்கும் அதிர்வலைகள்
நம்மோடு இருக்கும் உணர்வலைகள்
புண்ணுக்கு தடவும் மருந்தே
புவி யாவும் உனக்கு விருந்தே
அவரவர் தேவை அறிந்து -நீ
ஆற்று சேவை தொடர்ந்து.

இனிய கீதமே மிதந்து வா
என்னுள் புகுந்து என்னை நிறைக்கும்
இனிய கீதமே விரைந்து வா

புவி ஈர்ப்பால் நடக்கின்றேன்
பாதை  பல கடக்கின்றேன்
உன் ஈர்ப்பால் மகிழ்கின்றேன்
உலகில் நான் வாழ்கின்றேன்

இனிய கீதமே மிதந்து வா
என்னுள் புகுந்து என்னை நிறைக்கும்
இனிய கீதமே விரைந்து வா












No comments:

Post a Comment