மனதின் வெளிப்பாடு


Saturday 30 November 2019

உலக எய்ட்ஸ் தினம்


(World AIDS Day)
                                             (01-12-2019)

மனிதனை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் எத்தனையோ தீமைகளில் முக்கியமான அங்கம் வகிப்பது எய்ட்ஸ் ஆகும். ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழர் பண்பாடு- கலாச்சாரம். அதனைப் போற்றி காப்போம் .உலகில் எய்ட்சை ஒழிப்போம். 

எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக
ஒருவன் ஒருவன் முதலாளி என்ற பாட்டு மெட்டில் நான் எழுதிய பாடல்.

உலகில் உலகில் எயட்சாலே
அடையும்  துயரம் ஏராளம்
மனிதன் செய்யும் தவறாலே
அதுதான் பரவுது படுவேகம்
எய்ட்சை வெல்ல ஆயுதம்  எதற்கு ?
ஆசை துறந்தால் வருமோ எய்ட்ஸ் .?

(உலகில் உலகில் எயட்சாலே
அடையும்  துயரம் ஏராளம்)

அவளின் மீது அவனுக்காசை
பணத்தின் மீது அவளுக்காசை
ஆசை தான் அழிவைத் தருகிறது
உணர்ந்தும் மனமோ அலைகிறது
அலையும் மனதை அடக்கி வைத்தால்
நீதான் அதற்கு எஜமானன்
அலையும் மனதை அலையவிட்டால்
அதுதான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்து விடு
நலமாய் வாழும் முடிவை எடு.

(உலகில் உலகில் எயட்சாலே
அடையும்  துயரம் ஏராளம்)

குடும்பம் இருக்கு குழந்தைகள் இருக்கு
கண்டவரோடு சரசங்கள் எதற்கு ?
கற்பு என்பது ஒழுக்கமடா
அதில் ஆணும் பெண்ணும் அடக்கமடா
ஆசை எல்லை மீறும்  போது
தவறு நேர்ந்திடும் தன்னாலே
அதனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல்
உன்னிடம் உள்ளது உயர்வாலே
உடலின் உணர்ச்சிகள்  இயல்பாகும்
தவறாய்த்  தீர்ப்பது நோயாகும்

(உலகில் உலகில் எயட்சாலே
அடையும்  துயரம் ஏராளம்)

உன்னை அடைந்து உறவை அடைந்து
கருவில் வளரும் குழந்தையை அடைந்து
பரவும் நோய் தான் எயட்சாகும்
இது குழந்தைக்கும் வருவது தவிப்பாகும்
நாலு சுவர்க்குள் நடக்கும் தவறு
என்று மட்டும் எண்ணாதே
உலகே அறியும் நிலை உருவானால்
அழிவே அதற்கு கிடையாது
ஆசை என்பது அளவோடு
சுகமோ கட்டிய   துணையோடு .

(உலகில் உலகில் எயட்சாலே
அடையும்  துயரம் ஏராளம்) 

No comments:

Post a Comment