நடக்கப் பழகும் முன்
ஓடத் துவங்குகின்றன கால்கள்
இளமையில்...
ஓடிப் பழகிய பின்
ஓய்வெடுக்க முடியாமல்
ஓடிக்கொண்டே இருக்கின்றன கால்கள்
வாலிபத்தில்...
ஓடிய கால்களை நடக்க வைக்க
தேவைப்படுகிறது
மூன்றாவது கால்கள்
முதுமையில்...
மூச்சு நின்ற பின்
உயிரற்ற உடலை
தூக்கிச் சேர்ப்பது
பிறரின் கால்கள்...
No comments:
Post a Comment