மனதின் வெளிப்பாடு


Monday 17 October 2022

வைகுந்தம்-கைலாயம்


படித்து ரசித்தது

குருவிடம் சீடன் கேட்டான் வைகுந்தம் எங்கே இருக்கிறது ?கைலாயம் எங்கே இருக்கிறது?

குரு சொன்னார் வைகுந்தம் கூப்பிடு தூரத்தில் இருக்கிறது. கைலாயம் கைக்கெட்டிய தூரத்தில் இருக்கிறது.

கஜேந்திரன் என்ற யானையின் காலை முதலை பற்றிக்கொண்டது. ஆதிமூலமே என்று விஷ்ணுவை நினைத்து கூப்பிட்டது யானை.உடனே விஷ்ணு ஓடி வந்து காப்பாற்றினார். அதனால் வைகுண்டம் கூப்பிடும் தூரத்தில் உள்ளது.

பாசக் கயிறு கொண்டு மார்க்கண்டேயனை கட்டி இழுத்தும் ௭மனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.ஏனென்றால் கைக்கெட்டிய தூரத்தில் இருந்த சிவலிங்கத்தை மார்க்கண்டேயன் பற்றி கொண்டு இருந்தான். எனவே கைலாயம் கைக்கெட்டிய தூரத்தில் இருக்கிறது.

No comments:

Post a Comment