காதல் உணர்வு இயற்கையானது
காதல் தொந்தரவு கசப்பானது
பரங்கிமலை சம்பவம் படு மோசமானது
இரக்கமற்ற காதல்
இறப்புக்கும் காரணமாகின்றது
அவ்வப்போது
அரங்கேறத் தான் செய்கிறது
இதுபோன்ற சம்பவங்கள்.
பறிகொடுத்த பெற்றோர்கள் தவிப்பார்கள்
பழி வாங்கியவரின் பெற்றோர்களும் துடிப்பார்கள்
சமூகத்தில் அவர்கள் எப்படி
தலைநிமிர்ந்து நடப்பார்கள்?
ஒழுக்கமற்ற பிள்ளையென
ஊரார்கள் ஏசும்போது
கூனிக்குறுகி நிற்பார்கள்.
திசை மாறாமல்
வாரிசை வழி நடத்துவதில்
பெற்றோரின் பங்களிப்பு
மிக மிக அவசியம்.
நேசித்தவர் நேசிக்க மறுத்தால்
உயிரைப் பறிப்பது கொடுமை
தொடரக்கூடாது இந்த நிலைமை
சட்டத்தை கடுமையாக்கி
சமூக அவலத்தை போக்கி
சீர்படுத்துவோம் சிக்கல்களை.
No comments:
Post a Comment