மனதின் வெளிப்பாடு


Sunday 9 October 2022

யோசிப்போம்

 ஒரு பிரச்சனையை எப்போதுமே நாம் நம்முடைய கோணத்தில் பார்க்கிறோம்.அது அப்படித்தான் என்று முடிவு எடுக்கிறோம்.அப்படி இல்லாமல் அந்த பிரச்சனையை பிரச்சனைக்கு உரியவர்கள் என்று நினைக்கிறோமோ அவர்களின் கோணத்தில் இருந்தும் கொஞ்சம் பார்க்க வேண்டும்.

அப்போதுதான் பிரச்சினையின் உண்மையான தன்மை நமக்கு புரியும்.அப்படி யோசித்தால் பிரச்சனைகள் எளிதாக தீர்ப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

மற்றவர்களுடைய கோணத்திலிருந்தும் நாம் யோசித்து பார்க்கின்ற தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment