மனதின் வெளிப்பாடு


Thursday 6 October 2022

தடுமாற்றம் ஏன்?

 காயங்களுக்கான மருந்தாக

கவலை எப்படி இருக்க முடியும்?

எதுவும் நிரந்தரமில்லை

மாறாதது எதுவுமில்லை

என்கின்ற எண்ணமே

காயங்களுக்கான களிம்பு

தடவினால் மறையும் தழும்பு...


தடுக்கி விழும்போது

தாங்கிப் பிடிக்காதவர்கள்

வீறுநடை போடும் போது

விமர்சிக்க தகுதியற்றவர்கள்...


செதுக்கிய சிற்பியும்

வலி தாங்கிய கற்களும்

கண்ணுக்கு தெரிவதில்லை

சிற்பத்தில்...


ஏற்றிய படிக்கட்டுகளும்

பட்ட அவமானங்களும்

கண்ணுக்கு தெரிவதில்லை

வெற்றியில்...


தன்னம்பிக்கை இல்லாதவன்

தனக்குத் தானே

தாழிட்டுக் கொள்கிறான்

பிறரை வெறுப்பவன்

பிறரால் தாழிடப்படுகிறான்


பிறப்புக்கும் இறப்புக்குமான

இடைவெளியை

இறைவன் நிர்ணயிக்கிறான்

இடைவெளியை நிரப்ப

மனிதன்

பல வழியைத் தேடுகிறான்...


இதுவும் கடந்து போகும்

மனம் எண்ணினால்

அதுவே வாழ்க்கையாகும்

அழகாய் வாழ்வு மாறும்...



No comments:

Post a Comment