தோல்வியே நீ எங்கே பிறக்கிறாய்?
வெற்றி அடைய வேண்டும் என்ற உறுதி எங்கு தளர்கிறதோ அங்கு நான் பிறக்கிறேன்.
தன்னைப் பற்றி தவறாக பேசிய ஒருவனிடம் ஒரு மனிதன் கூறினார்.
நீ கூறியது உண்மையாக இருப்பின் இறைவன் என்னை மன்னிக்கட்டும்.
நீ கூறியது தவறாக இருப்பின் இறைவன் உன்னை மன்னிக்கட்டும்.
நன்மையை செய்கிறவன் கோவிலின் வெளி வாசல்படி வரை வருகிறான்.
அன்போடு நெருங்கி வருபவன் ஆலயத்தின் உள்ளே புகுந்து விடுகிறான்.
மானம் பெரிது உயிரல்ல.
மக்கள் பெரியவர் மதமல்ல
எவருக்கும் நாம் அடிமையல்ல
எவரும் நமக்கு அடிமை அல்ல
இதுவே நமக்கு கீதை.
நாட்டுப்பற்று என்பது கொடியேற்று விழாக்களில் இல்லை. தங்கள் உழைப்பை நாட்டுக்கு கொடுப்பதில் தான் உள்ளது.
மனிதர்களுக்கு எந்த பொருளின் மதிப்பும் அது இல்லாத போது தான் தெரியும்.
பெண்ணின் இரண்டு சொட்டு கண்ணீர் நூறு சொற்களை விட வலியது.
மனிதன் வெற்றியில் கற்பது சொற்பம் .தோல்வியில் கற்பது அதிகம்.
No comments:
Post a Comment