அறுபதைத் தொட்டு ஓராண்டு ஆயிடுச்சு எனக்கு
அவனைத் தொட ஆண்டுகள் எத்தனை இருக்கு?
ஆயுள்காலம் நாமாய் நீட்டிட வாய்ப்பில்லை
ஆண்டவன் கட்டளை மாற்றம் செய்திட அனுமதியில்லை
மண்ணில் பிறந்தால் மரணம் நிச்சயம்
விண்ணில் தொடரும் செய்த புண்ணியம்
இம்மையில் நன்மையை நிறைவாய் செய்தால்
மறுமையில் செழுமையை உயர்வாய் பெறலாம்.
இறையச்சம் என்னுள் இருப்பது பூரிப்பு
இறைவழிபாட்டில் முழுமை பெறவில்லை தவிப்பு
பணி ஓய்வு பெறும் வரை வாழ்க்கை அலுவலகத்தில்
பணி ஓய்வு பெற்ற பின் வாழ்க்கை ஆனந்தத்தில்.
சராசரியாய் இருப்பதிலும் இருக்கின்றன சங்கடங்கள்
சரிக்கட்டி சமாளிக்க ஏதும் இல்லை பின்புலங்கள்
இருப்பதைக் கொண்டு இயல்பாய் வாழ்ந்துவிட்டேன்
இறைவனுக்கு நன்றி சொல்லி பூரிப்பை பெற்று விட்டேன்.
No comments:
Post a Comment