மனதின் வெளிப்பாடு


Wednesday 20 June 2012

தமிழ் பண்பாடு காப்போம்



ஆணும் பெண்ணும் சேர்ந்துதானே கும்மாளம்
அதில் பரவுதுங்கோ எய்ட்ஸ் ரொம்ப பிரமாதம்
மாப்பிளை பொண்ணுகளை சேர்த்து வைப்பது கல்யாணம்
கல்யாணம் முடிக்குமுன்னே எதுக்கு இந்த கும்மாளம்

ஆணும் ஆணும் ஓரினம்
பெண்ணும் பெண்ணும் ஓரினம்
ஓரினத்தில சேர்க்கை ரொம்ப தவறுங்க
அதில் பரவுதுங்க எய்ட்ஸ் ரொம்ப அதிகங்க

ஒருவன் ஒருத்தி இல்லறம்
உறவு என்றும் சுதந்திரம்
சுதந்திரத்தை காப்பது நம் கடமைங்க
மனசை அலையவிட்டா வந்திடுமே எயட்சுங்க

 கை நிறைய சம்பளம்
வசிப்பதுவும்  தனியிடம்
தவறு செய்ய தூண்டிடுதே பலரிடம்
அந்தத் தவறாலே புகுந்திடும் நோய் சிலரிடம்

ஆப்பிரிக்கா  முதலிடம்
நாம அதுக்கு அடுத்த இடம்
எதுலயின்னு யோசிச்சு பாருங்க
அது பரவுர எய்ட்ஸ்ல தானுங்க

 மனசுக்குள்ளே ஆசை என்பது கடலுங்க
அது கரை தாண்ட வந்திடுமே புயலுங்க
மனசுக்குள்ளே புகுந்திடும் சில மயிலுங்க
அதைப் பக்குவமா தள்ளி வைக்க பழகுங்க

No comments:

Post a Comment