பெண்ணின் இனமே உனைத்தேடி
வாழ்கின்ற ஆணினம் பலகோடி
உன்னில் புனித நீராடி
வாழ்வைத் துவக்க துணை வாடி
மனதின் சுமைகள் பாரமடி
உன்னருகில் அவைகள் தூரமடி
கண்ணின் விழியால் பார்வையடி
உந்தன் வரவால் முழுமையடி
சல் சல் ஒலி உன் கொலுசோடி
என் இருதய ஒலியும் மாறுதடி
பலப் பல சிந்தனை தோன்றுதடி
அத்தனையும் மிக இன்பமடி
வாலி உனக்கேதும் உறவாடி
நீ எதிர்வர பலம் பாதி போகுதடி
நித்திரை நிலுவையில் உள்ளதடி
மார்கழிப் பனியிலும் வியர்க்குதடி
பத்தரை மாற்றுத் தங்கமடி
உன் தடம் பட்டாலே வெற்றியடி
No comments:
Post a Comment