மனதின் வெளிப்பாடு


Thursday 21 June 2012

அன்புள்ள காதலிக்கு



பெண்ணின் இனமே உனைத்தேடி
வாழ்கின்ற ஆணினம்  பலகோடி
உன்னில் புனித நீராடி
வாழ்வைத் துவக்க துணை வாடி

மனதின் சுமைகள் பாரமடி
உன்னருகில் அவைகள் தூரமடி
கண்ணின் விழியால் பார்வையடி
உந்தன் வரவால் முழுமையடி 

சல் சல்  ஒலி  உன் கொலுசோடி
என் இருதய ஒலியும்  மாறுதடி
பலப் பல சிந்தனை தோன்றுதடி
அத்தனையும் மிக இன்பமடி

வாலி உனக்கேதும்  உறவாடி
நீ எதிர்வர பலம் பாதி போகுதடி
நித்திரை நிலுவையில் உள்ளதடி
மார்கழிப் பனியிலும்  வியர்க்குதடி

பத்தரை மாற்றுத் தங்கமடி
உன் தடம் பட்டாலே வெற்றியடி

No comments:

Post a Comment