மனதின் வெளிப்பாடு


Saturday 16 June 2012

வளையத்தை வெட்டி விடு

வளையத்தை   வெட்டி விடு
சிககலெல்லாம்  தீர்ந்து விடும்
சொன்னார்கள் தோழர்கள்
  
புரியாமல நானும்தான்
வளையத்தை   வெட்டிவிட்டால்
வளையம்   சிதைந்தல்லவா
போய் விடும் என்றேன்

சிதைந்த  வளையமே  
சிக்கலுக்கு மருந்து என்றார்கள்
புரியாமல் நான் விழிக்க
புரிய வைத்தார் தோழர்தான்

தன பலத்து உழைப்பாலே
தான் பெற்ற சம்பளத்தை
முன் பெற்ற கடனுக்காய்
வட்டிக் கடன் கொடுத்தவர்கள் 
வளைத்து நின்றார்
வளையம்  போலே
 
தோழர் சொன்னார்
இறைவா !   இந்த
வளையத்தை  வெட்டிவிடு 
என் சிக்கலெல்லாம்  தீர்ந்து விடும்

தொன்று தொட்ட சொற்றொடர்தான்
என்றாலும்  தொழிலாளர்
ஒட்டு மொத்த நிலையிதுதான்

நிலை மாறும் நாள் வரவே
தன நிலை மறந்து கடனைத்தான்
 வாங்காதீர் எந்நாளும்
சிக்காதீர் வளையத்தில்  

No comments:

Post a Comment