சிங்கம், புலி, கரடி
காட்டுக்குள்ள இருக்கு
சீறும் அதன் நினைப்பு
நாட்டுக்குள்ள எதுக்கு?
வாழும மனிதருக்கு
அந்தக்குணம் இருக்கு
மூடி மறச்சிருக்கு
முகத்தோட சிரிப்பு
வெளிச்சம் தரும் நிலவு
விண்ணுல தான் இருக்கு
அது தேஞ்சு மறையுறது
இயற்கையின் பொறுப்பு
இயற்கையின் மாற்றம் அறிந்திடலாம்
அதன் சீற்றம் உணர்ந்து வாழ்ந்திடலாம்
மனதின் மாற்றம் புரியாது - அது
எப்போ வெடிக்கும் தெரியாது
மனத்தைக் காட்டும் கண்ணாடி
முகமென்று சொல்வது அக்காலம்
முகத்துக்கு மேலே முகமூடி
நிஜத்தை தொலைக்கிறோம் அதை சூடி.
No comments:
Post a Comment