பெண்ணை நிலவுக்கு ஒப்பிட்டு,
நிலவென்றதும் உன் முகம்தான்
என் ஞாபகத்துக்கு ...
பகலில் நீ சூரியனாய் தகித்தாலும்
வீட்டுத் தேவைகளைச் சொல்லி
என்னை வருத்தினாலும்
இரவினிலே எப்போதும் நிலவு போலே!
மாதத்தின் ஆரம்பம்
அது பௌர்ணமியின் அடையாளம்
பட்ஜெட்டில் பற்றாக்குறை
அது தேய் பிறை நிலவாகும்
நம் வீட்டில் விருந்தினர்கள்
என்னருகே நீ இருந்தும்
மேகங்கள் மறைத்தது போல்
அமாவாசை அதுவாகும் .
மீண்டும் மீண்டும்
தேய்ந்தும் வளர்ந்தும்
தெரிவது நிலவு
மீண்டும் மீண்டும்
ஊடியும் கூடியும்
தொடர்கிறது நம் உறவு !
No comments:
Post a Comment