ஆண் : பரவசம் பனித்துளி மாதிரி
பலரகம் இருக்குது காதலி
பெண் : முற்றும் உணர்ந்த காதலா
முழுதும் நீ சொல்லித் தர ஆவலா
ஆண் :ஆணினம் பெண்ணினம் யாவுமே
ஆவலுடன் இதைக் கேட்குமே
அறம் பொருள் அடுத்து இன்பமே
அகிலம் அதனுள் தஞ்சமே
பெண் :வசியம் செய்யும் வார்த்தையால்
மனதின் ஆசைகள் கூடுதே
தலை முதல் பாதம் யாவுமே
நீ எதிர் வர ஏதோ தோணுதே
ஆண் :நாணம் என்ற போர்வை தான்
என்னிடம் ஏனடி காதலி
உடல் பொருள் ஆவி யாவுமே
உன்னிடம் தஞ்சம் தானடி
பெண் : விளக்கிட இயலா வார்த்தைகள்
என்னுள் புதைந்து தவிக்குதே
உன்பார்வை பட்ட நாணமோ
தானம் செய்திட தோணுதே
ஆண் : நோபல் பெற்ற அறிஞரும்
நோ பல்லான கிழவரும்
முற்றும் துறந்த முனிவரும்
சிக்கிச் சுழன்றிடும் சுழலிது
பெண் : பேசிய வார்த்தைகள் போதும்
செயலினில்காட்டு வேகம்
தனலாய் கொதிக்குது தேகம்
தடையை நீ செய் சேதம் !
No comments:
Post a Comment