மனதின் வெளிப்பாடு


Thursday 21 June 2012

இணையத் துடிக்கும் இருமனம்


















ஆண் : பரவசம் பனித்துளி மாதிரி
               பலரகம் இருக்குது காதலி

பெண் : முற்றும் உணர்ந்த காதலா
                முழுதும் நீ சொல்லித் தர ஆவலா

ஆண் :ஆணினம்  பெண்ணினம் யாவுமே
             ஆவலுடன் இதைக் கேட்குமே
              அறம்  பொருள் அடுத்து இன்பமே
              அகிலம் அதனுள் தஞ்சமே

 பெண் :வசியம் செய்யும் வார்த்தையால்
               மனதின் ஆசைகள் கூடுதே

               தலை முதல் பாதம் யாவுமே
                நீ எதிர் வர  ஏதோ தோணுதே


ஆண் :நாணம் என்ற போர்வை தான்
              என்னிடம் ஏனடி காதலி
               உடல் பொருள் ஆவி யாவுமே
               உன்னிடம் தஞ்சம் தானடி

பெண் : விளக்கிட இயலா வார்த்தைகள் 
                என்னுள் புதைந்து தவிக்குதே
                உன்பார்வை பட்ட நாணமோ
                 தானம் செய்திட தோணுதே  

ஆண் : நோபல் பெற்ற அறிஞரும்
                நோ  பல்லான கிழவரும்
                 முற்றும் துறந்த முனிவரும்                 
                 சிக்கிச் சுழன்றிடும் சுழலிது 

பெண் : பேசிய வார்த்தைகள் போதும்
                 செயலினில்காட்டு வேகம்
                தனலாய்  கொதிக்குது தேகம்
                தடையை நீ செய் சேதம் !
 



No comments:

Post a Comment