மனதின் வெளிப்பாடு


Sunday 6 May 2012

தரமே நீ எங்கிருக்கிறாய்?



உத்தரவாதத்துக்கு  உறுதி அளிப்பவர்தம்
உணர்வினில்  கலந்திருக்கிறேன்
அவர்தம் கரங்களில் தவழ்ந்திருக்கிறேன்
இந்தப் பொருள்  பத்தரைமாற்றுத் தங்கமென
இத்தரை மாந்தர்கள் கூறுகின்ற
கூற்றினில் ஒளிந்திருக்கிறேன்
அந்த உயர்வினில் உயர்ந்திருக்கிறேன்

எனதொழிலில் எவரும் குறை கூற முடியாது
என்ற ஒருவன் ஆணவத்தில் அமிழ்ந்திருக்கிறேன்
வெறும் பேச்சோடு நின்றிடாமல்  அதை
சாதனையாய் சாதிக்கும் சாதனையில்
தொழில் நேர்த்தியில் மகிழ்ந்திருக்கிறேன்

விற்றவன் மகிழ்ச்சியை விட
பொருள் பெற்றவனின் நிலைத்த மகிழ்ச்சியில்
நீடித்திருக்கிறேன்
அடக்க விலையின் அங்கம் தானே சேதாரம்
மனக்கவலை அதன்பாற் கொண்டு
சேதாரத்துக்கே சேதாரத்தை உண்டு பண்ணும்
சூட்சுமத்தில் தொழில் நேர்த்தியில் பூரிக்கின்றேன்

என்னால் முடியாது என்பவனை
மூலையில் ஒதுக்குகின்றேன்
தடையைத் தகர்த்து தரத்தைக் கொணர
என்னால் முடியும் என்று நெஞ்சை நிமிர்த்துகிறவன்
மூளையில் முதிர்ச்சியடைகிறேன்
.
.

No comments:

Post a Comment