மனதின் வெளிப்பாடு


Monday 7 May 2012

வாழ்வு உன் கையில்




எந்த ஊரில்
எது பிரசித்தம்
மனம் அதிலே நாட்டம்
உண்ணும் உணவோ
உடுத்தும் உடையோ
மலிவின் பக்கம்  ஓட்டம்

கனவின் பலனை
நிஜமாய் நம்பி
களித்திருக்கும் ஒரு கூட்டம்
திறமையிருந்தும்
துணிவைஇழந்தால்
வாழ்வில் வந்திடும் வாட்டம்

உடமைஇருந்தும்
ஒழுக்கம் குறைந்தால்
தொழிலில் ஏற்படும் நஷ்டம்
இப்படி நடக்கும்
அப்படி நடக்கும்
எண்ணுவோர்  மனதில் பதட்டம்

உண்மையிருந்தும் 
உறுதி குலைந்தால்
வாழ்வில் ஏற்படும் கஷ்டம்
வாட்டும் வறுமையில்
வாடி விடாமல்
முயன்றால் பலனும் கிட்டும்

நம் நிலை உணர்ந்து
தன்னலம் மறந்தால்
இலட்சியம் நிச்சயம்  எட்டும்
உணர்வால் உயர்ந்து
உழைப்பால் சிறக்க
வழித்துணையாவது  திட்டம்


இருப்பதைக் கொண்டு
சிறப்புற வாழ்வது
அவரவர் வாழ்வின் இஷ்டம்

No comments:

Post a Comment