மனதின் வெளிப்பாடு


Sunday 6 May 2012

இயற்கையும் செயற்கையும்



இறைவன் கட்டுப்பாட்டில்
மனிதர்கள்
மனிதன் கட்டுப்பாட்டில்
மகத்துவங்கள்

நிலாவைக்காட்டி
சோறு ஊட்டியது ஒருகாலம்
நிலாவில் கால் பதித்து
ஆய்வு செய்வது நிகழ்காலம்

மண்ணிலிருந்து விண்ணுக்கு
செலுத்துகிற செயற்கைக்கோள்
உயிரை உடலோடு நிறுத்திவைக்க
செயற்கை சுவாசம்
குழந்தை பிரசவிக்க
செயற்கை கருவூட்டல்

இயற்கையை  மாறுபடுத்தும்
எத்தனையோ செயற்கைகள்
தேவையிருந்தும் தேவையில்லாமலும்
மனிதனால் தினந்தோறும்

பிழை நேராத வரை
பறைசாற்றுகிறான் 
அதை பெருமையாக
துயரம் நேரும் போது
கடவுளின் தீர்ப்பென்று
தேற்றுகிறான் திறமையாக
 

No comments:

Post a Comment