மனதின் வெளிப்பாடு


Monday 28 May 2012

ம (னி)தம் புனிதமானது


நான் இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன்
என் நாட்டின் மீது பற்று அதிகமாயிருக்கிறது 
நான் ஒரு மதத்தில் பிறந்திருக்கிறேன்   மதத்தின் மீது நம்பிக்கை வளர்ந்திருக்கிறது 
என் மதம் தான் சிறந்ததென்று எண்ணுகின்றேன் 
சிந்தனையின் சுதந்திரம் நம்பிக்கையை வளர்த்திருக்கிறது 
நம்பிக்கையை பிறர் மீது திணிப்பதோ 
மற்றவர் புண்பட எடுத்துரைப்பதோ 
வேதத்தைக் காட்டி பேதத்தை வளர்ப்பதாகும் 
மதம் மனிதனை மறைத்திருக்கிறது 
மனித நேயத்தை குறைத்திருக்கிறது 
மதத்தை விட்டு மனிதனை நேசிப்போம்  
சகல உயிர்களையும் சமமாய் பாவிப்போம் 
இறை நம்பிக்கை அவசியம் 
ஒன்றே கடவுள் சத்தியம் 

No comments:

Post a Comment