மனதின் வெளிப்பாடு


Sunday 21 October 2012

ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து





தள்ளாத வயதினிலே 
தான் பெற்ற ஒரே மகனாம் 
இளைஞரான இஸ்மாயீலை
இறைவனுக்காய்  பலி கொடுக்க 
இம்மியேனும் மனம் கலங்கா 
துணிந்திட்ட இப்ராஹீமின் 
உள்ளத்தில் உறைந்திருந்த 
உன்னத உறுதியினை  
வல்ல நாயன் மனமுவந்து 
வானிருந்து ஆடு இறக்கி 
நல்லதல்லா நர பலியை 
நானிலத்தில் ஒழித்திட்ட 
நன்னாளாம் தியாகத்திருநாள் 
நயம் பயக்க அனைவருக்கும் 
வல்லோனை இறைஞ்சி என் 
வாழ்த்தினையும் கூறுகிறேன் 

 












குர்பானியின் மாமிசங்களோ அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைவதில்லை. ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும். அல்குர் ஆன் 22:37
 


எழுதியவர்  -    முகவை . முகமது  ஆதம் 

                                                   cell :   7708179412




 

No comments:

Post a Comment