தள்ளாத வயதினிலே
தான் பெற்ற ஒரே மகனாம்
இளைஞரான இஸ்மாயீலை
இறைவனுக்காய் பலி கொடுக்க
இம்மியேனும் மனம் கலங்கா
துணிந்திட்ட இப்ராஹீமின்
உள்ளத்தில் உறைந்திருந்த
உன்னத உறுதியினை
வல்ல நாயன் மனமுவந்து
வானிருந்து ஆடு இறக்கி
நல்லதல்லா நர பலியை
நானிலத்தில் ஒழித்திட்ட
நன்னாளாம் தியாகத்திருநாள்
நயம் பயக்க அனைவருக்கும்
வல்லோனை இறைஞ்சி என்
வாழ்த்தினையும் கூறுகிறேன்
குர்பானியின் மாமிசங்களோ அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைவதில்லை. ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும். அல்குர் ஆன் 22:37
எழுதியவர் - முகவை . முகமது ஆதம்
cell : 7708179412
No comments:
Post a Comment