மனதின் வெளிப்பாடு


Saturday 12 October 2013

காதல்


காதல் ...
அளவில்லா உயிர்களின்
அரும்பும் உணர்வு

காதல் ...
பலரின்
தடம் பதித்த பாதை

காதல்...
மலர்ந்து
மனம் பரப்பும் பூஞ்சோலை

காதல் ...
பல சரித்திரங்களின் பின்னணி
பல சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சி
பல சாதனைகளின் எழுச்சி

காதல் ...
இதன் விளிம்பைத் தொட்டு
விலகுபவர் பலர்
மூழ்கி முததெடுப்பவர் சிலர்

காதல் ...
இனக் கவர்ச்சியால்
கவரப்பட்டவர்கள்
விரைவில்
சோர்ந்து விடுகின்றாகள்

காதல் ...
மனக் கவர்ச்சியால்
மகிழப்பட்டவர்கள்
அன்போடு
சேர்ந்து வாழ்கிறார்கள்

ஈதலும்
இசைபட வாழ்தலும்
வள்ளுவன் வகுத்த பாதை

காதலும்
கண்பட வாழ்தலும்
காதலின் மங்காத பாதை

No comments:

Post a Comment