வாழு
உன் உயர்வுக்காய் வாழு - இந்த
உலகின் உயர்வுக்காகவும் வாழு.
எதிர் நீச்சல் பழகியவனுக்கு
எதிராளியைப் பற்றி
பயம் எதற்கு?
சுயம் முன்னேற முன்னேற
பயம் பின் வாங்குகிறது
வியர்வை முத்துக்களின்
பிடியில் தான்
உலகின் சொத்துக்கள்
படர்ந்து கிடக்கின்றது
எடுத்து மகிழ்பவர்கள சிலர்
ஏமாந்து மடிபவர்கள் பலர்
பலரில் ஒருவனாவாதும்
சிலரில் ஒருவனாவதும்
விதியல்ல நண்பனே
நாம் கொண்ட நம்பிக்கை
விதைக்கிற விதைதான் முளைக்கும்
வீரியமும் கவனமும்
காரியத்தின் அனுகூலங்கள்
இருக்கிற போதும்
இழக்கிற போதும்
இயல்பாய் இருப்பவர்களை
உலகம் நிச்சயம்
அடையாளம் காட்டும்
முடியாதென ஒய்ந்திருப்பது
இயலாமை
முடியும் என முயற்சி செய்வதே
ஒவ்வொருவரின் கடமை
இரைப்பை காலியானால்
இயல்பாய் இருக்க முடியாது
நம்பிக்கை காலியானால்
உலகில் வாழவே பிடிக்காது
நம்பிக்கை அஸ்திவாரத்தில்தான்
எண்ணம் ஈடேருகிறது
ஏற்றம் கிட்டுகின்றது.
No comments:
Post a Comment