மனதின் வெளிப்பாடு


Saturday, 5 April 2025


 ஓய்வே... எனக்கு எதற்கு?

 கண்ணீரில்... கரையாதே 

  சமூகப் பணிகள் நிறைய இருக்கு

  உனக்காகவே காத்திருக்கு....


 பணிகள் முடித்து வந்த துறைகள்

 அதில் சிறப்பை கூட்டும் உன்  பணிகள்

 என்றென்றும் உன் பேரைச் சொல்லும்

  எண்ணத்தில் என்றென்றும் தங்கும் 

உயர்வாகவே நாம்  வாழுவோம்...


 வயது ஆட்கொண்டது

 ஓய்வை பணி தந்தது 

பிணியை யார் தந்தது? 

அதன் வரவை யார் வெல்வது?

வயதானால் தோற்றத்தில் மாற்றம்

 உள்ளத்தில் கூடாது  வாட்டம்

 உயர்வாகவே நாம் வாழுவோம்


நட்பு சிறக்கின்றது

 நன்மை கிடைக்கின்றது 

வாரிசு விரும்பாதது- நாம் 

வழிகாட்ட முன் நிற்பது

 நாம் பெற்ற பிள்ளைகள் இன்று

 வாழட்டும் அதன் போக்கில் நன்று

 உயர்வாகவே நாம் வாழுவோம்




Wednesday, 26 March 2025

 இனிய தரம் செய்து பாருங்கள்

 பொருள் விற்பனையில்  தேங்குவதில்லை

 பெருமையுடன் நிமிர்ந்து நில்லுங்கள்

 தரம் படைப்பவர்கள் வீழ்வது இல்லை

   ( இனிய தரம்....)

 அள்ள அள்ள குறையாத  ஆற்றல் பெற்றது

 ஈடு இணை இல்லாத சிறப்பை பெற்றது

செய்யும் தொழில் சிறக்க வழி வகுக்கின்றது

 உலகம் எங்கும் பரவியது ஜொலிக்கின்றது

 ( இனிய தரம்....)

 ஆர்வமுடன் உழைப்பவருக்கு அள்ளித்  தருகுது

 அல்லல் துன்பம் துயரங்களை தள்ளி நிறுத்துது

 பெயரைச் சொல்லி பொருளை கேட்கும் பெருமை படைக்குது 

அந்த பெருமையோடு உலகைச் சுற்றி உயர்ந்து  நிற்குது

 இழப்பு கண்டு மாந்தர்களே தளராதீர்கள்

 தரத்தை கூட்டும் யுக்திகளை கையில் எடுங்கள்

 அதன் இடத்தில் குறை அனைத்தும் சுட்டிக்காட்டுங்கள்

 தரம் சிறந்து  தொழிலினிலே வெற்றி பெறுங்கள்

 ( இனிய தரம்....)

 புத்தாக்கம் என்பதெல்லாம் புதுமை செய்வது 

செய்யச் செய்ய தொழிலும் மிக விருத்தி ஆகுது

 யோசனைகள் அனைவருக்கும் பொதுவானது

 நல் யோசனைகள்  குவிவது தான்  சிறப்பாகுது

  பிழைகளற்ற செயல்கள் என்று ஏதுமில்லை

 பிழைகள் எல்லாம் தொடர்வது தான் பெரிய தொல்லை

 அதை தவிர்க்கும் வழிமுறைதான் தரத்தின்  எல்லை

 இதை உணர்ந்தால் வெற்றி என்றும் குறைவதில்லை

 ( இனிய தரம்....)



Saturday, 22 March 2025

 தரம் எங்கே? எங்கே? தேடிப் பார்க்கும் உலகிலே 

பொருள் தரம் இருந்தால் விற்க விற்க  தடையில்லே

 அதன் உயர்வைக் கூட்ட  உறுதி எடு மனதிலே

 தரம் இன்னும் இன்னும் நிறைய வேணும் பணியிலே

 தரம் இல்லை இல்லை தோல்வி தானே   தொழிலிலே


 தரம் தன்னால தான் வந்தா 

தொழில் எல்லோருக்கும் ஒண்ணா

 தரம் நம்மால் தான் வந்தா

 நாம எல்லோருக்கும்  முன்னா


 அந்த ஒத்த வார்த்தை சொன்னா

 பொருள் விற்கும் விற்கும் (Gunna)

 அது இல்லாமல் தான் நின்னா 

 தொழில் ஆகி போகும் மண்ணா(2)

(தரம் எங்கே? எங்கே...)

 அடங்கா குதிரையைப் போல

 இருந்தன இழப்பு எல்லாமே

 ஒரு பூதம் போல, பூதம் போல துரத்தி வந்ததே

 படுத்தால் தூக்கமும் இல்லை

 தொழிலில்  பல பல தொல்ல

 அந்த தொல்லையால,  தொல்லையால  பூரிப்பு இல்லை

  குழுவாய் நாங்க இணைய

 பெரிதாய் இழப்பு குறைய

  தர வட்டம் கண்ட வெற்றி கண்டு ஆர்பரித்தோமே


 இழப்ப மனசுல  தேக்கி

குழுவாய் இணைஞ்சே போக்கி

 இன்னும்  கூட்டுறோம் தரத்தை

  தடையாய் எதுவும் வந்தாலும்

 தடையாய் எதுவும் வந்தாலும்

  தடையாய் எதுவும் வந்தாலும்

(தரம் எங்கே? எங்கே...)

 இழப்போ ராட்சசன் தாண்டா

 தினமும் வருகுது  ஜோரா

 அது மேல கீழ, மேல கீழ புரட்டுது  தோடா

 பல நாள் உச்சத்தில் இருந்து 

சில நாள் பொத்துன்னு விழுந்தா

 அந்த தோல்வியால தோல்வியால

 தரத்துல குறைஞ்சா..

 யாரும் கூடவே வாரார்

 வந்தவர் பாதியில் போவார் 

அவரை தக்க வைக்க அவரு நம்ம 

சொந்தம் இல்லையே.....


 தரத்த வெகுவாய் உயர்த்தி

 இழப்பை தடுத்தே நிறுத்தி

 ஜோரா பயணத்தை கெளப்பி

 உலகை வலம் வருவோமே 

உலகை வலம் வருவோமே 

உலகை வலம் வருவோமே

(தரம் எங்கே? எங்கே...)

Sunday, 5 January 2025

மீண்டும் இணைவோம்

 தாய்க்கு தலை மகனாய்

 அருள் ஆனந்தர் கல்லூரியின்

 வேதியியல் துறையின் முதல்  பிரிவாய்

 பயிலும் வாய்ப்பை பெற்றோம்

 இனிதாய் அதனை கற்றோம்..


  முப்பது பேராய் இணைந்தோம்

 மூன்றாண்டு பயணம் தொடர்ந்தோம்

 இளங்கலை பட்டம் பெற்றோம்..


 அருளை ஆனந்தமாய் வழங்கிய

 கல்லூரிக்கும்,  ஆசான்களுக்கும்

 அகம் நிறைந்த  நன்றிகளோடு

 அவரவர் பாதையில் தொடர்ந்தோம்..


 ஆண்டுகள் உருண்டோடியது

 பாதைகள் பலவாகியது

 படித்தது போதும் என்று

 பணிக்கு சிலர் சென்றோம்

 சுய தொழிலில் முன்னேறும்

 சூட்சுமத்தை சிலர் கற்றோம்

 இன்னும் படித்தால் சிறப்பென்று

 இயன்றவரை சிலர் படித்தோம்

 தகுதியை மெருகூட்டி

 தனக்கான பாதையை வளமாக்கி

 உள்நாட்டிலும், அயல் நாட்டிலும்

 பணி செய்யும் வாய்ப்பு பெற்றோம்

 எல்லோரும் இன்புற்றோம்...


 குடும்பம் மனைவி மக்கள் என்று

  குதூகலித்து மகிழ்ந்தோம்

 பிள்ளைகளைப் பார்த்து ரசித்தோம்

 பார்த்து, பார்த்து பராமரித்தோம்

 அல்லும் பகலும் உழைத்து

 அதற்கான பயணம் தொடர்ந்தோம்

 தந்தையாய் கடமை செய்தோம்

 தாத்தாவாய்  உயர்வு பெற்றோம்

 நிறைவான மகிழ்வு பெற்றோம்..


 வாழ்க்கைப் பாதையில்

 பல மேடு பள்ளங்கள்

 அத்தனையும் கடந்தோம்

 கொரோனா அலையில் தப்பித்தோம்

 இறைவனுக்கு நன்றி...


 அரசின் ஆணைப்படி

 பணி ஓய்வு பெற்றோம்

 பணியின்  மேன்மையால்

 ஆலோசகராய் சிலர் பணியாற்றுகிறோம்

 பொருளுக்காய் அல்ல

  சுறுசுறுப்பாய் இயங்க..

  இயக்கம் இன்றியமையாதது

 ஓடிக்கொண்டிருக்கும் நீரில் தான்

 ஆக்சிஜன் அதிகம்..


 சுய தொழிலில் ஓய்வில்லை

 தொடர்ந்திட யாதொரு  தடையில்லை

 நம்மில் சிலரோ  இன்றில்லை

 இறைவன் தீர்ப்பில் மறுப்பில்லை

 இணையும் நட்பில்  பேதமில்லை

 இணைக்கும் காலம்  தூரமில்லை..